ஜனவரி மத்தியில் ஆதித்யா எல்-1 லாக்ராஞ்ச் புள்ளியை அடையும்!
Mar 15, 2026, 11:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜனவரி மத்தியில் ஆதித்யா எல்-1 லாக்ராஞ்ச் புள்ளியை அடையும்!

இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 15, 2023, 01:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் முதல் சூரியப் பயணமான ஆதித்யா எல்-1 விண்கலம், ஜனவரி மாதம் மத்தியில் லாக்ராஞ்ச் புள்ளியை (எல்-1) அடையும் என்று இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் இன்று தெரிவித்தார்.

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ உருவாக்கிய ஆதித்யா எல்-1 விண்கலம், செப்டம்பர் 2-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது. இந்த விண்கலம் புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து 5 முறை உயர்த்தப்பட்டு சூரியனை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக செய்து வருகிறது.

ஆதித்யா எல்-1 விண்கலத்தில் சூரியனைப் பற்றிய விரிவான ஆய்வுக்கு வெவ்வேறு பேலோடுகள் உள்ளன. இவற்றில் 4 சூரியனில் இருந்து வரும் ஒளியைக் கண்காணிக்கும். மற்ற 3 பேலோடுகள் பிளாஸ்மா மற்றும் காந்தப்புலங்களில் உள்ள சிட்டு அளவுருக்களை அளவிடும். ஆதித்யா எல்-1 பூமியிலிருந்து சூரியனின் திசையில் 1.5 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ள லக்ராஞ்சியன் புள்ளி-1 (எல்-1) சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் வைக்கப்படும். இத்தொலைவை 4 மாதங்களில் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “ஆதித்யா எல்-1 நன்றாக வேலை செய்கிறது. தற்போது பூமியில் இருந்து லாக்ராஞ்ச் எல்-1 புள்ளிக்கு பயணிக்க கிட்டத்தட்ட 110 நாட்களாகும். அந்த வகையில், ஜனவரி மாதத்தின் மத்தியில் ஆதித்யா எல்-1, லாக்ராஞ்ச் எல்-1 புள்ளியை அடைந்துவிடும். இதன் பிறகு, ஆதித்யா எல்-1 விண்கலத்தை, லாக்ராஞ்ச் எல்-1 புள்ளியில் நிலைநிறுத்தச் செய்வோம். இதுதான் ஒளிவட்ட சுற்றுப்பாதை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு மிகப்பெரிய சுற்றுப்பாதை” என்றார்.

தொடர்ந்து, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ பணி குறித்துப் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “ககன்யான் திட்டம் தொடர்பான சோதனை விண்கலம் டி-1 மிஷன் அக்டோபர் 21-ம் தேதி திட்டமிடப்பட்டிருக்கிறது. இது ககன்யான் திட்டத்தின் பணியாளர்கள் தப்பிக்கும் முறையை சோதித்தலாகும். ககன்யானில் க்ரூ எஸ்கேப் சிஸ்டம் மிகவும் முக்கியமான அமைப்பாகும். ராக்கெட்டுக்கு ஏதாவது நேர்ந்தால், நீங்கள் வெடிக்கும் ராக்கெட்டில் இருந்து குறைந்தபட்சம் 2 கி.மீ. தூரம் நகர்த்தி பணியாளர்களை காப்பாற்ற முடியும்.

எனவே, இச்சோதனையானது விமானத்தின் ஒரு நிலையில் பணியாளர்கள் தப்பிக்கும் அமைப்பை நிரூபிக்க உள்ளது. நாம் காண்பிக்கும் இந்த நிலை டிரான்சோனிக் நிலை என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ஒரு ஏவலையாவது நடத்துவோம். இச்சோதனை வாகனம் ஏவப்பட்ட பிறகு, ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ககன்யான் ஆளில்லா விண்கலம் ஏவப்படும். ஆகவே, ஜனவரி மாதத்துக்கு முன்பு நீங்கள் குறைந்தது 4-5 ஏவுகணைகளைக் காண்பீர்கள்” என்றார்.

Tags: ISROAadhitya L-1Chief Somnath
ShareTweetSendShare
Previous Post

அப்துல் கலாம் இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்! – அண்ணாமலை.

Next Post

ஆபரேஷன் அஜய்: இஸ்ரேலில் இருந்து மேலும் 471 பேர் வருகை!

Related News

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies