தரைவழித் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல்: திக்குமுக்காடும் ஹமாஸ் தீவிரவாதிகள்!
Jul 25, 2025, 08:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தரைவழித் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல்: திக்குமுக்காடும் ஹமாஸ் தீவிரவாதிகள்!

எல்லையில் அணிவகுத்து நிற்கும் பீரங்கிகள், டாங்கிகள்!

Web Desk by Web Desk
Oct 15, 2023, 03:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இதுவரை வான்வழித் தாக்குதலை மட்டுமே நடத்தி வந்த இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர், தற்போது தரைவழித் தாக்குதலிலும் ஈடுபட்டிருப்பாதல், சமாளிக்க முடியாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் திக்குமுக்காடி வருகின்றனர்.

காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது அறிவிக்கப்படாத போரைத் தொடங்கினர். ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய ஏவுகணை மற்றும் தரைவழித் தாக்குதலில் 1,300-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, போரை அறிவித்த இஸ்ரேல், விமானப்படை மூலம் காஸா பகுதியில் குண்டுமழை பொழிந்து வருகிறது. இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்கள் இருவர் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் 200 பேர் உட்பட 1,700-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், இஸ்ரேல் தற்போது தரைவழித் தாக்குதலையும் தொடங்கி இருக்கிறது. இதையடுத்து, இஸ்ரேல்-காஸா எல்லையில் காஸா பகுதியை நோக்கி பீரங்கிகளையும், டாங்கிகளையும் தயார் நிலையில் நிறுத்தி இருக்கிறது. இதன் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான முழு தரை தாக்குதலுக்கும் இஸ்ரேல் தயாராகி இருப்பது தெரிகிறது. காஸா எல்லைக்கு அருகே நிறுத்தப்பட்டிருக்கும் இந்த டாங்கிகள் மூலம் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் காஸா பகுதியை நோக்கி குண்டுகளை வீசுவதைக் காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன. அதேபோல, வீரர்கள் பீரங்கி குண்டுகளை ஹோவிட்சர்களில் ஏற்றுவதையும் காண முடிகிறது.

இதுகுறித்து இஸ்ரேல் இராணுவத்தின் உயர்மட்ட செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறுகையில், “காஸா பகுதியில் பாலஸ்தீன தீவிரவாதிகளுடன் நடந்து வரும் போரின், அடுத்தகட்ட நகர்வுக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படை தயாராகி வருகிறது. எனவே, காஸாவின் வடக்குப் பகுதியில் இருக்கும் மக்கள் தெற்குப் பகுதிக்கு இடம்பெயருமாறு வலியுறுத்தி இருக்கிறோம். அவ்வாறு வெளியேற விரும்பாதவர்கள் தங்களையும், தங்களது குடும்பத்தினரையும் ஆபத்தில் ஆழ்த்துகிறார்கள். மக்கள் வெளியேற்றப்பட்ட பகுதிகளில் நாங்கள் பெரும் பலத்துடன் தாக்குவோம்” என்று கூறுயிருக்கிறார்.

மேலும், ஹகாரி கூறுகையில், “எங்களது தாக்குதலால் ஹமாஸ் தீவிரவாதிகள் கடும் அழுத்தத்திலும், அச்சத்திலும் இருக்கிறார்கள். எனவே, பாலஸ்தீனியர்கள் வெளியேறுவதைத் தடுக்கும் முயற்சியில் ஹமாஸ் தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். காரணம், தீவிரவாதிகள் மக்களை கேடயமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும், 150-க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, ஹமாஸ் தீவிரவாதிகள் காஸா நகரில் வீடுகளுக்கு அடியில் அமைந்துள்ள சுரங்கப் பாதைகளிலும், பொதுமக்களின் வீடுகளிலும் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவும், பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேல் மக்களை மீட்கவும் காலாட்படை மற்றும் டாங்கிகள் காஸா பகுதிக்குள் நுழைந்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. இஸ்ரேல் பதிலடியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் திக்குமுக்காடி வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Tags: Israeldeployedtanks
ShareTweetSendShare
Previous Post

ரூ.3 லட்சம் அபராதம் – 5 ஆண்டு சிறை – எதற்குத் தெரியுமா?

Next Post

ஹமாஸ் முக்கிய கமாண்டோ படைத் தளபதி “காலி”!

Related News

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies