1,85,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள்! - ஆர்பிஎஃப்.
Sep 27, 2025, 12:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1,85,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள்! – ஆர்பிஎஃப்.

Web Desk by Web Desk
Oct 15, 2023, 05:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தில்லியில் நடைபெற்ற அரை மாரத்தான் ஓட்டத்தில் ரயில்களில் பெண்களின் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு ரயில்வே பாதுகாப்புப் படை பங்கேற்றது.

ரயில்களில் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் நோக்கில் ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆர்.பி.எஃப்) 25 பேர் கொண்ட குழு இன்று தில்லியில் நடைபெற்ற ஹாஃப் மாரத்தான் – 21.09 கிலோ மீட்டர் தூர ஓட்டத்தில் பங்கேற்றது.

மாரத்தான் பாதையில், ஆர்பிஎப், வீரர்கள் பொதுமக்களுடன் இணைந்து, பதாகைகளை காண்பித்ததுடன், ரயில்களில் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து, அனைத்து தரப்பினரின் ஆதரவையும் கோரினர்.

இந்திய ரயில்வே கட்டமைப்பில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆர்பிஎஃப்-ன் பல்வேறு முன்முயற்சிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த ஓட்டத்தின் நோக்கமாகும்.

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எஃப்) பெண் ரயில் பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்க விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் பரந்த ரயில்வே கட்டமைப்பு முழுவதும் செயல்படும் “மேரி சஹேலி” எனப்படும் பெண்கள் பாதுகாப்புக் குழுக்கள், நீண்ட தூர ரயில்களில் தனியாக பயணிக்கும் எண்ணற்ற பெண்களுக்கு உதவி மற்றும் பாதுகாப்பை வழங்கி வருகின்றன.

ரயில்களிலும், ரயில் நிலைய வளாகங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆர்பிஎஃப் பெண் பணியாளர்கள் ஆண் பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

2023 ஆம் ஆண்டில், ஆர்பிஎஃப் வீரர்கள் குறிப்பிடத்தக்க செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளனர். ரயில்களில் ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்து 862 பெண்களை மீட்டுள்ளனர். ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் ஆபத்தில் இருந்த 2,898 ஆதரவற்ற சிறுமிகளையும் அவர்கள் மீட்டுள்ளனர். மேலும், 51 சிறுமிகள் மற்றும் 6 பெண்களை கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து மீட்டுள்ளனர்.

ரயில் பயணங்களின் போது 130 தாய்மார்களின் பிரசவம் தொடர்பான பணிகளில் ஆர்பிஎஃப் பெண் ஊழியர்கள் உதவியுள்ளனர். 1,85,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்து பயணிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆர்பிஎஃப் பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: rpfIndian Railway police force
ShareTweetSendShare
Previous Post

குப்பைகளை நீக்கியதில் ரூ.66.83 லட்சம் வருவாய் !- இந்திய ரயில்வேத் துறை.

Next Post

தெலங்கானாவில் நாளை ராஜ்நாத் சிங் பிரசாரம்!

Related News

பிரியாவிடை பெற்ற வான்பரப்பின் பாதுகாவலன் மிக் 21 போர் விமானம்!

ஆப்ரேஷன் சிந்துாரில் சேதமான விமானதளங்களை சீரமைக்க நிதி – பாகிஸ்தானிற்கு ட்ரம்ப் ஒப்புதல்?

தொழில்துறையில் 20 லட்சம் ரோபோக்களை களமிறக்கிய சீனா : மார்க்கெட்டை இழந்து தவிக்கும் அமெரிக்கா, ஜப்பான்!

இந்திய பெருங்கடலில் வெப்பம் உயர்வதால் பேராபத்து : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வாளர்கள்!

இந்திய ராணுவம் புதிய சாதனை : ரயிலில் இருந்து சீறிப் பாயும் அக்னி-ப்ரைம்!

காப்புரிமை மருந்துகளுக்கு 100 % வரி : ட்ரம்பின் உத்தரவால் இந்திய மருந்து துறைக்கு பாதிப்பா?

Load More

அண்மைச் செய்திகள்

இயற்பியல் ஒலிம்பியாட்டில் அமெரிக்க அணி சாதனை : வெள்ளை மாளிகையே பெருமைபடுத்திய இந்திய வம்சாவளி மாணவன்!

மத்திய அரசின் மாஸ்டர் பிளான் : 2029 தேர்தலுக்கு முன் வடமாநிலங்களுக்கு சிந்து நதிநீர்!

ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் களைகட்டும் விற்பனை : திண்பண்டங்கள் விலை குறைந்ததால் குஷி!

5001 கொலு பொம்மைகளுடன் கொலு மண்டபம்!

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் : பிரதமர் மோடி

ராகுல் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம்!

மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை : அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

ஓய்வு பெற்றது 3 போர் கண்ட மிக்-21 ஜெட்!

செந்தில் பாலாஜியுடனான மோதல் போக்கின் எதிரொலி : கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பதவி நீக்கம்!

திமுக ஆட்சியும் ஒரு வெற்று காகிதம் தான் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies