1,85,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள்! - ஆர்பிஎஃப்.
Aug 8, 2026, 06:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1,85,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள்! – ஆர்பிஎஃப்.

Murugesan M by Murugesan M
Oct 15, 2023, 05:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தில்லியில் நடைபெற்ற அரை மாரத்தான் ஓட்டத்தில் ரயில்களில் பெண்களின் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு ரயில்வே பாதுகாப்புப் படை பங்கேற்றது.

ரயில்களில் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் நோக்கில் ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆர்.பி.எஃப்) 25 பேர் கொண்ட குழு இன்று தில்லியில் நடைபெற்ற ஹாஃப் மாரத்தான் – 21.09 கிலோ மீட்டர் தூர ஓட்டத்தில் பங்கேற்றது.

மாரத்தான் பாதையில், ஆர்பிஎப், வீரர்கள் பொதுமக்களுடன் இணைந்து, பதாகைகளை காண்பித்ததுடன், ரயில்களில் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து, அனைத்து தரப்பினரின் ஆதரவையும் கோரினர்.

இந்திய ரயில்வே கட்டமைப்பில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆர்பிஎஃப்-ன் பல்வேறு முன்முயற்சிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த ஓட்டத்தின் நோக்கமாகும்.

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எஃப்) பெண் ரயில் பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்க விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் பரந்த ரயில்வே கட்டமைப்பு முழுவதும் செயல்படும் “மேரி சஹேலி” எனப்படும் பெண்கள் பாதுகாப்புக் குழுக்கள், நீண்ட தூர ரயில்களில் தனியாக பயணிக்கும் எண்ணற்ற பெண்களுக்கு உதவி மற்றும் பாதுகாப்பை வழங்கி வருகின்றன.

ரயில்களிலும், ரயில் நிலைய வளாகங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆர்பிஎஃப் பெண் பணியாளர்கள் ஆண் பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

2023 ஆம் ஆண்டில், ஆர்பிஎஃப் வீரர்கள் குறிப்பிடத்தக்க செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளனர். ரயில்களில் ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்து 862 பெண்களை மீட்டுள்ளனர். ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் ஆபத்தில் இருந்த 2,898 ஆதரவற்ற சிறுமிகளையும் அவர்கள் மீட்டுள்ளனர். மேலும், 51 சிறுமிகள் மற்றும் 6 பெண்களை கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து மீட்டுள்ளனர்.

ரயில் பயணங்களின் போது 130 தாய்மார்களின் பிரசவம் தொடர்பான பணிகளில் ஆர்பிஎஃப் பெண் ஊழியர்கள் உதவியுள்ளனர். 1,85,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்து பயணிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆர்பிஎஃப் பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: rpfIndian Railway police force
Share
Tweet
SendShare
Previous Post

குப்பைகளை நீக்கியதில் ரூ.66.83 லட்சம் வருவாய் !- இந்திய ரயில்வேத் துறை.

Next Post

தெலங்கானாவில் நாளை ராஜ்நாத் சிங் பிரசாரம்!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies