1,85,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள்! - ஆர்பிஎஃப்.
May 9, 2026, 03:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1,85,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள்! – ஆர்பிஎஃப்.

Murugesan M by Murugesan M
Oct 15, 2023, 05:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தில்லியில் நடைபெற்ற அரை மாரத்தான் ஓட்டத்தில் ரயில்களில் பெண்களின் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு ரயில்வே பாதுகாப்புப் படை பங்கேற்றது.

ரயில்களில் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் நோக்கில் ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆர்.பி.எஃப்) 25 பேர் கொண்ட குழு இன்று தில்லியில் நடைபெற்ற ஹாஃப் மாரத்தான் – 21.09 கிலோ மீட்டர் தூர ஓட்டத்தில் பங்கேற்றது.

மாரத்தான் பாதையில், ஆர்பிஎப், வீரர்கள் பொதுமக்களுடன் இணைந்து, பதாகைகளை காண்பித்ததுடன், ரயில்களில் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து, அனைத்து தரப்பினரின் ஆதரவையும் கோரினர்.

இந்திய ரயில்வே கட்டமைப்பில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆர்பிஎஃப்-ன் பல்வேறு முன்முயற்சிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த ஓட்டத்தின் நோக்கமாகும்.

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எஃப்) பெண் ரயில் பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்க விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் பரந்த ரயில்வே கட்டமைப்பு முழுவதும் செயல்படும் “மேரி சஹேலி” எனப்படும் பெண்கள் பாதுகாப்புக் குழுக்கள், நீண்ட தூர ரயில்களில் தனியாக பயணிக்கும் எண்ணற்ற பெண்களுக்கு உதவி மற்றும் பாதுகாப்பை வழங்கி வருகின்றன.

ரயில்களிலும், ரயில் நிலைய வளாகங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆர்பிஎஃப் பெண் பணியாளர்கள் ஆண் பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

2023 ஆம் ஆண்டில், ஆர்பிஎஃப் வீரர்கள் குறிப்பிடத்தக்க செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளனர். ரயில்களில் ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்து 862 பெண்களை மீட்டுள்ளனர். ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் ஆபத்தில் இருந்த 2,898 ஆதரவற்ற சிறுமிகளையும் அவர்கள் மீட்டுள்ளனர். மேலும், 51 சிறுமிகள் மற்றும் 6 பெண்களை கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து மீட்டுள்ளனர்.

ரயில் பயணங்களின் போது 130 தாய்மார்களின் பிரசவம் தொடர்பான பணிகளில் ஆர்பிஎஃப் பெண் ஊழியர்கள் உதவியுள்ளனர். 1,85,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்து பயணிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆர்பிஎஃப் பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: rpfIndian Railway police force
ShareTweetSendShare
Previous Post

குப்பைகளை நீக்கியதில் ரூ.66.83 லட்சம் வருவாய் !- இந்திய ரயில்வேத் துறை.

Next Post

தெலங்கானாவில் நாளை ராஜ்நாத் சிங் பிரசாரம்!

Related News

உடல்நலக்குறைவால் வேதாந்தம் ஜி மருத்துவமனையில் அனுமதி – நேரில் நலம் விசாரித்தார் மோகன் பாகவத்!

மேற்குவங்கத்தில் முதன்முறையாக பாஜக ஆடசி – முதல்வராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி!

தலைமை தாங்கும் தமிழர் – முப்படைகளின் தலைமை தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமனம்!

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி சட்டமன்ற தலைவராக ரங்கசாமி தேர்வு!

ஆட்சியமைக்க யாருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்கக் கோரி 42 நிர்வாகிகள் டெல்லிக்கு கடிதம்!

தவெகவிற்கு பதிலாக அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்குமாறு திமுக கேட்டது – எம்.ஏ.பேபி

ஜனநாயக அடிப்படையிலும், மக்கள் நலன் சார்ந்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல்படும் – வீரபாண்டியன்

தவெக சார்பில் ஆளுநரிடம் போலி கடிதம் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது – காதர் மொய்தீன்

தவெகவுக்கு ஆதரவாக போராட்டம்; காங். நிர்வாகிகளை வெளுத்த திமுகவினர்

3-வது முறையாக ஆளுநரை சந்தித்த விஜய்; ஆட்சியமைக்க உரிமை கோரினார்!

டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

ஒரே இரவில் ஒன்றிணைந்த திராவிட கட்சிகள் – மாணிக்கம் தாகூர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies