தெலங்கானாவில் நாளை ராஜ்நாத் சிங் பிரசாரம்!
Aug 8, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலங்கானாவில் நாளை ராஜ்நாத் சிங் பிரசாரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 15, 2023, 05:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதல்வரும், பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ், தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி விட்டிருக்கும் நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை தெலங்கானா மாநிலத்தில் பிரச்சாரம் செய்யவிருப்பதாக பா.ஜ.க. தெரிவித்திருக்கிறது.

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 119 இடங்களில் பி.ஆர்.எஸ். கட்சி 88 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் வெற்றிபெற்று 2-வது இடத்தைப் பிடித்தது. பா.ஜ.க. 1 இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றது.

இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தெலங்கானாவைப் பொறுத்தவரை, ஆளும் பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆகவே, 3 கட்சிகளும் ஏற்கெனவே தேர்தலை பிரசாரத்தைத் தொடங்கி விட்டன.

இந்த நிலையில், தெலங்கானாவில் போட்டியிடும் வேட்பாளர்களில் முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று காலை வெளியிட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, இன்று காலை தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவரும் முதல்வருமான சந்திரசேகர ராவ், மாநில மக்களுக்கு 400 ரூபாய்க்கு சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும் என்றும், அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்று வாக்குறுதிகளை அள்ளி விட்டிருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தெலங்கானா மாநிலத்தில் அக்டோபர் 18-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகின்றனர். அதேபோல, தெலங்கானா பி.சி.சி. கட்சி, மாநிலம் முழுவதும் உயர்மட்டத் தலைவர்களின் பஸ் யாத்திரையை தொடங்க உள்ளது. இந்த பஸ் யாத்திரையில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கலந்து கொள்கின்றனர்.

அதேசமயம், தெலங்கானாவில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. இன்னும் வெளியிடவில்லை. இந்த நிலையில்தான், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவிருப்பதாக பா.ஜ.க. அறிவித்திருக்கிறது. அதன்படி, ஹுசூராபாத் (கரீம்நகர்) மற்றும் மகேஷ்வர் (ரங்காரெட்டி) ஆகிய இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ராஜ்நாத் சிங் உரையாற்றுகிறார்.

Tags: Rajnath SinghTelenganaRally
Share
Tweet
SendShare
Previous Post

1,85,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள்! – ஆர்பிஎஃப்.

Next Post

முடியுமா என்ற கேள்விக்கு இஸ்ரோதான் பதிலளித்தது : சோம்நாத் பெருமிதம்!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies