முடியுமா என்ற கேள்விக்கு இஸ்ரோதான் பதிலளித்தது : சோம்நாத் பெருமிதம்!
Sep 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முடியுமா என்ற கேள்விக்கு இஸ்ரோதான் பதிலளித்தது : சோம்நாத் பெருமிதம்!

25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும் என்றும் உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 15, 2023, 05:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முடியுமா என்கிற கேள்விக்கு இஸ்ரோதான் பதிலளித்தது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைந்த நாடாக இருக்கும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியிருக்கிறார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்ட விஞ்ஞானிகள் பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில், அவரது 92-வது பிறந்த நாள் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்ட விஞ்ஞானிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சோம்நாத், “நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க முடியுமா என்று உலக நாடுகள் யோசித்தபோது, அந்த திறமையை நிலைநாட்டியது இந்தியாதான்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகளவில் சிறந்த நாடு என்று இந்தியா காட்டி இருக்கிறது. முடியுமா, முடியாதா என்கிற கேள்விகளுக்கு இஸ்ரோதான் பதிலளித்திருக்கிறது. சாதாரண குடும்பத்தில் பிறந்து சாதாரணக் கல்வியை படித்தவர் அப்துல்கலாம். அவர் இஸ்ரோ பொறியாளர், ராக்கெட் பொறியாளர், குடியரசுத் தலைவர் என பல பரிமாணங்களில் முன்னேறியவர். நீங்களும் அதுபோல் முன்னேற வேண்டும்.

நானும் சாதாரண பள்ளியில் படித்தவன்தான். அனைத்து சமூக மக்களின் அன்பையும் பெற்று வருகிறேன். ஒரு முறை பி.எஸ்.எல்.வி. தோல்வியடைந்தபோது, குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமை சந்தித்து விளக்கினோம். அப்போது, சரமாரியாகக் கேள்வி எழுப்பியவர், எதிர்காலத்தில் இதுபோல் நடக்காதவாறு இருக்க அறிவுரை வழங்கினார். அதை நினைத்து பெருமிதம் கொள்கிறோம். அடுத்த 25 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பம் மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா இருக்கும்” என்றார்.

Tags: rameswaramBirthdaySomnathAPJ Abdul Kalam
Share
Tweet
SendShare
Previous Post

தெலங்கானாவில் நாளை ராஜ்நாத் சிங் பிரசாரம்!

Next Post

 இந்தியா – பாகிஸ்தான் போட்டி : மைதானத்தில் வந்தே மாதரம் பாடிய நடிகர் சதீஷ்.!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies