முடியுமா என்ற கேள்விக்கு இஸ்ரோதான் பதிலளித்தது : சோம்நாத் பெருமிதம்!
Apr 29, 2026, 10:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முடியுமா என்ற கேள்விக்கு இஸ்ரோதான் பதிலளித்தது : சோம்நாத் பெருமிதம்!

25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும் என்றும் உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 15, 2023, 05:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முடியுமா என்கிற கேள்விக்கு இஸ்ரோதான் பதிலளித்தது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைந்த நாடாக இருக்கும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியிருக்கிறார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்ட விஞ்ஞானிகள் பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில், அவரது 92-வது பிறந்த நாள் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்ட விஞ்ஞானிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சோம்நாத், “நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க முடியுமா என்று உலக நாடுகள் யோசித்தபோது, அந்த திறமையை நிலைநாட்டியது இந்தியாதான்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகளவில் சிறந்த நாடு என்று இந்தியா காட்டி இருக்கிறது. முடியுமா, முடியாதா என்கிற கேள்விகளுக்கு இஸ்ரோதான் பதிலளித்திருக்கிறது. சாதாரண குடும்பத்தில் பிறந்து சாதாரணக் கல்வியை படித்தவர் அப்துல்கலாம். அவர் இஸ்ரோ பொறியாளர், ராக்கெட் பொறியாளர், குடியரசுத் தலைவர் என பல பரிமாணங்களில் முன்னேறியவர். நீங்களும் அதுபோல் முன்னேற வேண்டும்.

நானும் சாதாரண பள்ளியில் படித்தவன்தான். அனைத்து சமூக மக்களின் அன்பையும் பெற்று வருகிறேன். ஒரு முறை பி.எஸ்.எல்.வி. தோல்வியடைந்தபோது, குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமை சந்தித்து விளக்கினோம். அப்போது, சரமாரியாகக் கேள்வி எழுப்பியவர், எதிர்காலத்தில் இதுபோல் நடக்காதவாறு இருக்க அறிவுரை வழங்கினார். அதை நினைத்து பெருமிதம் கொள்கிறோம். அடுத்த 25 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பம் மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா இருக்கும்” என்றார்.

Tags: rameswaramBirthdaySomnathAPJ Abdul Kalam
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானாவில் நாளை ராஜ்நாத் சிங் பிரசாரம்!

Next Post

 இந்தியா – பாகிஸ்தான் போட்டி : மைதானத்தில் வந்தே மாதரம் பாடிய நடிகர் சதீஷ்.!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies