காங்கிரஸின் டி.என்.ஏ.விலேயே ஊழல் உள்ளது: ஜெ.பி.நட்டா தாக்கு!
Jul 25, 2025, 07:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸின் டி.என்.ஏ.விலேயே ஊழல் உள்ளது: ஜெ.பி.நட்டா தாக்கு!

ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் எனவும் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Oct 16, 2023, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் கட்சியின் டி.என்.ஏ.விலேயே ஊழல் இருக்கிறது. காங்கிரஸும், ஊழலும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கடுமையாகத் தாக்கி இருக்கிறார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சட்டவிரோத நிதியைப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கும் என்று பா.ஜ.க. தலைவர்கள் பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடாக மாநிலம் பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் அஸ்வத்தம்மா மற்றும் ஒப்பந்ததாரர் அம்பிகாபதி தம்பதிக்குச் சொந்தமான வீட்டில் கட்டிலின் மெத்தைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 42 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இதன் மூலம், பா.ஜ.க. தலைவர்கள் கூறியது உண்மை என்பது நிரூபணமாகி இருக்கிறது.

இந்த நிலையில், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “காங்கிரஸ் கட்சி வாக்குறுதிகளை அளிப்பதில் தேர்ச்சி பெற்றிருக்கிறது. தற்போது அக்கட்சி ஒரு படி மேலே சென்று வாக்குறுதிகளுக்கு பதிலாக உத்தரவாதத்தைக் கொடுக்கத் தொடங்கி இருக்கிறது. இது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

கர்நாடகாவில் உள்ள சில ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் வெட்கக்கேடானது மற்றும் வாக்காளர்களை கேவலப்படுத்தும் கேலிக்கூத்தானது. இது காங்கிரஸ் கட்சியின் டி.என்.ஏ.விலேயே ஊழல் இருக்கிறது என்பதற்கு ஒரு சிறிய சாம்பிள்தான்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலின்போது இதே காங்கிரஸ் ஆதரவு ஒப்பந்ததாரர்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக பொய்களை பரப்புவதில் தீவிரமாக இருந்தனர். இது கர்நாடகாவின் துரதிர்ஷ்டம். பண மோசடி, ஊழல் மற்றும் வரவிருக்கும் தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்கான ஏ.டி.எம்.மாக கர்நாடக அரசை காங்கிரஸ் மாற்றி இருக்கிறது. காங்கிரஸால் ஊழலுக்கு எப்போதும் உத்தரவாதம் அளிக்க முடியும். காரணம், காங்கிரஸும் ஊழலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.

சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களை ஊழல் ஏ.டி.எம்.களாக மாற்றிய காங்கிரஸ் அரசு, தற்போது தெலங்கானா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றி ஏ.டி.எம்.களை உருவாக்கி மக்கள் பணத்தை கொள்ளையடிக்க நினைக்கிறது. ஏழைகளின் நலனுக்காகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் செலவிட வேண்டிய பணத்தை கொள்ளையடிப்பதற்கு காங்கிரஸால் மட்டுமே உத்தரவாதம் கொடுக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.

 

कांग्रेस पार्टी को वादे करने की कला में महारत हासिल है और अब यह पार्टी एक कदम आगे बढ़कर वादों के बदले में गारंटी देने लगी है।
कर्नाटक में कतिपय ठेकेदारों के घरों से हाल ही में 100 करोड़ से अधिक की नकदी मिलने का खुलासा हुआ है जो बेहद शर्मनाक व मतदाता के साथ घिनौना मजाक है।… pic.twitter.com/0IpZCxnibL

— Jagat Prakash Nadda (@JPNadda) October 16, 2023

 

Tags: J.P.Naddabjp president
ShareTweetSendShare
Previous Post

பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்!

Next Post

ஆஸ்திரேலியா vs இலங்கை : வெல்லப்போவது யார் ?

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies