காங்கிரஸின் டி.என்.ஏ.விலேயே ஊழல் உள்ளது: ஜெ.பி.நட்டா தாக்கு!
Sep 12, 2026, 11:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸின் டி.என்.ஏ.விலேயே ஊழல் உள்ளது: ஜெ.பி.நட்டா தாக்கு!

ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் எனவும் குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 16, 2023, 01:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரஸ் கட்சியின் டி.என்.ஏ.விலேயே ஊழல் இருக்கிறது. காங்கிரஸும், ஊழலும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கடுமையாகத் தாக்கி இருக்கிறார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சட்டவிரோத நிதியைப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கும் என்று பா.ஜ.க. தலைவர்கள் பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடாக மாநிலம் பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் அஸ்வத்தம்மா மற்றும் ஒப்பந்ததாரர் அம்பிகாபதி தம்பதிக்குச் சொந்தமான வீட்டில் கட்டிலின் மெத்தைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 42 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இதன் மூலம், பா.ஜ.க. தலைவர்கள் கூறியது உண்மை என்பது நிரூபணமாகி இருக்கிறது.

இந்த நிலையில், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “காங்கிரஸ் கட்சி வாக்குறுதிகளை அளிப்பதில் தேர்ச்சி பெற்றிருக்கிறது. தற்போது அக்கட்சி ஒரு படி மேலே சென்று வாக்குறுதிகளுக்கு பதிலாக உத்தரவாதத்தைக் கொடுக்கத் தொடங்கி இருக்கிறது. இது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

கர்நாடகாவில் உள்ள சில ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் வெட்கக்கேடானது மற்றும் வாக்காளர்களை கேவலப்படுத்தும் கேலிக்கூத்தானது. இது காங்கிரஸ் கட்சியின் டி.என்.ஏ.விலேயே ஊழல் இருக்கிறது என்பதற்கு ஒரு சிறிய சாம்பிள்தான்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலின்போது இதே காங்கிரஸ் ஆதரவு ஒப்பந்ததாரர்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக பொய்களை பரப்புவதில் தீவிரமாக இருந்தனர். இது கர்நாடகாவின் துரதிர்ஷ்டம். பண மோசடி, ஊழல் மற்றும் வரவிருக்கும் தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்கான ஏ.டி.எம்.மாக கர்நாடக அரசை காங்கிரஸ் மாற்றி இருக்கிறது. காங்கிரஸால் ஊழலுக்கு எப்போதும் உத்தரவாதம் அளிக்க முடியும். காரணம், காங்கிரஸும் ஊழலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.

சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களை ஊழல் ஏ.டி.எம்.களாக மாற்றிய காங்கிரஸ் அரசு, தற்போது தெலங்கானா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றி ஏ.டி.எம்.களை உருவாக்கி மக்கள் பணத்தை கொள்ளையடிக்க நினைக்கிறது. ஏழைகளின் நலனுக்காகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் செலவிட வேண்டிய பணத்தை கொள்ளையடிப்பதற்கு காங்கிரஸால் மட்டுமே உத்தரவாதம் கொடுக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.

 

कांग्रेस पार्टी को वादे करने की कला में महारत हासिल है और अब यह पार्टी एक कदम आगे बढ़कर वादों के बदले में गारंटी देने लगी है।
कर्नाटक में कतिपय ठेकेदारों के घरों से हाल ही में 100 करोड़ से अधिक की नकदी मिलने का खुलासा हुआ है जो बेहद शर्मनाक व मतदाता के साथ घिनौना मजाक है।… pic.twitter.com/0IpZCxnibL

— Jagat Prakash Nadda (@JPNadda) October 16, 2023

 

Tags: J.P.Naddabjp president
Share
Tweet
SendShare
Previous Post

பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்!

Next Post

ஆஸ்திரேலியா vs இலங்கை : வெல்லப்போவது யார் ?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies