பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்!
Sep 12, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்!

ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 16, 2023, 12:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல், பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தி இருக்கிறார்.

காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது அறிவிக்கப்படாத போரை அரங்கேற்றினர். அரை மணி நேரத்திற்குள் கண்மூடித்தனமாக 7,000 ஏவுகணைகளை செலுத்தி இஸ்ரேலை நிலைகுலைய வைத்தனர். எனினும், சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல், விமானப் படை மூலம் காஸா நகரில் குண்டு மழை பொழிந்து வருகிறது.

அதேபோல, பீரங்கி மூலமும் தரைவழித் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறது. மேலும், காலாட்படை வீரர்களும் காஸா நகருக்குள் புகுந்து ஹமாஸ் தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர். இத்தாக்குதல்களில் இஸ்ரேல் தரப்பில் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கம் நிலையில், 3,600-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

அதேபோல, காஸா தரப்பில் ஹமாஸ் தீவிரவாதிகள் 200-க்கும் மேற்பட்டோர் உட்பட 2,300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 5,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். அதோடு, காஸா நகரின் முக்கிய மின்நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில், காஸா நகரமே இருளில் மூழ்கிக் கிடக்கிறது.

இது தவிர, நீர்நிலைகளைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதேசமயம், இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள், சுமார் 200 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றிருக்கின்றனர்.

இந்த நிலையில்தான், எவ்வித நிபந்தனையும் இன்றி, ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் குட்டரெஸ் வெளியிட்டிருக்கும் பதிவில், “நாம் மத்திய கிழக்கில் அபாயத்தின் விளிம்பில் இருப்பதால், எனக்கு 2 மனிதாபிமான வேண்டுகோள்கள் உள்ளன.

முதல் கோரிக்கை ஹமாஸ் அமைப்பினருக்கானது. எவ்வித நிபந்தனையும் இன்றி பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். இரண்டாவது கோரிக்கை இஸ்ரேலுக்கானது. காஸாவில் உள்ள பொதுமக்களின் நலனுக்காக மனிதாபிமான உதவிகளை செய்ய அனுமதிக்க வேண்டும். இந்த 2 நோக்கங்களில் ஒவ்வொன்றும் நிச்சயமாக செயல்படுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: IsraelHamasUN Chief guterres
Share
Tweet
SendShare
Previous Post

பி20 உச்சிமாநாடு வெற்றி: சபாநாயகர் ஓம்பிர்லா!

Next Post

காங்கிரஸின் டி.என்.ஏ.விலேயே ஊழல் உள்ளது: ஜெ.பி.நட்டா தாக்கு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies