பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்!
Jun 15, 2026, 02:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்!

ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 16, 2023, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல், பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தி இருக்கிறார்.

காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது அறிவிக்கப்படாத போரை அரங்கேற்றினர். அரை மணி நேரத்திற்குள் கண்மூடித்தனமாக 7,000 ஏவுகணைகளை செலுத்தி இஸ்ரேலை நிலைகுலைய வைத்தனர். எனினும், சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல், விமானப் படை மூலம் காஸா நகரில் குண்டு மழை பொழிந்து வருகிறது.

அதேபோல, பீரங்கி மூலமும் தரைவழித் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறது. மேலும், காலாட்படை வீரர்களும் காஸா நகருக்குள் புகுந்து ஹமாஸ் தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர். இத்தாக்குதல்களில் இஸ்ரேல் தரப்பில் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கம் நிலையில், 3,600-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

அதேபோல, காஸா தரப்பில் ஹமாஸ் தீவிரவாதிகள் 200-க்கும் மேற்பட்டோர் உட்பட 2,300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 5,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். அதோடு, காஸா நகரின் முக்கிய மின்நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில், காஸா நகரமே இருளில் மூழ்கிக் கிடக்கிறது.

இது தவிர, நீர்நிலைகளைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதேசமயம், இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள், சுமார் 200 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றிருக்கின்றனர்.

இந்த நிலையில்தான், எவ்வித நிபந்தனையும் இன்றி, ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் குட்டரெஸ் வெளியிட்டிருக்கும் பதிவில், “நாம் மத்திய கிழக்கில் அபாயத்தின் விளிம்பில் இருப்பதால், எனக்கு 2 மனிதாபிமான வேண்டுகோள்கள் உள்ளன.

முதல் கோரிக்கை ஹமாஸ் அமைப்பினருக்கானது. எவ்வித நிபந்தனையும் இன்றி பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். இரண்டாவது கோரிக்கை இஸ்ரேலுக்கானது. காஸாவில் உள்ள பொதுமக்களின் நலனுக்காக மனிதாபிமான உதவிகளை செய்ய அனுமதிக்க வேண்டும். இந்த 2 நோக்கங்களில் ஒவ்வொன்றும் நிச்சயமாக செயல்படுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: IsraelHamasUN Chief guterres
ShareTweetSendShare
Previous Post

பி20 உச்சிமாநாடு வெற்றி: சபாநாயகர் ஓம்பிர்லா!

Next Post

காங்கிரஸின் டி.என்.ஏ.விலேயே ஊழல் உள்ளது: ஜெ.பி.நட்டா தாக்கு!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies