மனிதனை நிலவுக்கு அனுப்புவது எப்போது? இஸ்ரோ தலைவர் பேட்டி!
Jan 14, 2026, 09:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனிதனை நிலவுக்கு அனுப்புவது எப்போது? இஸ்ரோ தலைவர் பேட்டி!

சிறியவகை ராக்கெட்டுகளை ஏவ குலசேகரப்பட்டினம்தான் பெஸ்ட்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 16, 2023, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மனிதர்களை நிலவுக்குக் கொண்டு செல்வதற்கு பெரிய ராக்கெட்டை தயாரிக்க வேண்டும். இப்பணிகள் 10 முதல் 12 ஆண்டுகளுக்குள் நிறைவடைந்து விட்டால், மனிதர்களை நிலவுக்குக் கொண்டு செல்லும் நிலையை எட்டி விடலாம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியிருக்கிறார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மகேந்திரகிரியில் இஸ்ரோவின் உந்துவிசை வளாகம் இயங்கி வருகிறது. இங்குதான் ராக்கெட்டுக்கான உதிரி பாகங்களை இஸ்ரோ தயாரிக்கிறது. மேலும், திரவ இன்ஜின் சோதனை உள்ளிட்ட சிக்கலான பணிகளும் இங்குதான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குலசேகரப்பட்டினத்தில் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த ஏவுதளம் அருகே இலங்கைத் தீவு இருப்பதால், ஏவப்படும் அனைத்து ராக்கெட்டுகளும் அத்தீவைச் சுற்றி செல்ல வேண்டி இருக்கிறது. இதனால், ராக்கெட்டின் பேலோடு திறன் குறைந்து விடுகிறது. இதன் காரணமாக, இங்கிருந்து சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவுவது சிரமமாக இருக்கிறது.

எனவே, சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவுவதற்கு தென் பகுதிதான் சிறந்தது. அந்த வகையில், கன்னியாகுமரியிலிருந்து ஏவினால் சிறந்ததாக இருக்கும். ஆனால், கன்னியாகுமரியில் அவ்வளவு பெரிய இடம் இல்லை. எனவே, தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் அரசு 2,000 ஏக்கர் நிலம் ஒதுக்கி இருக்கிறது. நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது. இங்கிருந்து சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவுவது சிறப்பனதாக இருக்கும்.

சந்திராயன்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டிருக்கிறது. அந்த அனுபவத்தின் அடிப்படையில், அடுத்தடுத்த தரையிறக்கம் நடைபெறும். முதலில், நிலவிலிருந்து மாதிரிகள் திரும்பி வருவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு, ரோபாட் அங்கிருந்து திரும்பி பூமிக்கு வரவேண்டும். அதற்கான திட்டங்களை தயாரிக்க வேண்டும். மேலும், மனிதர்களை அனுப்ப பெரிய அளவிலான ராக்கெட்டை வடிவமைக்க வேண்டும்.

தற்போது இருக்கும் ராக்கெட்டில் மனிதனை கொண்டு செல்வதற்கான வசதிகள் இருக்காது. இதுவெறும் 4.5 டன் எடை கொண்டதுதான். ஆகவே, 12.5 டன் எடை கொண்ட ராக்கெட்டை தயாரிக்க வேண்டும். இவையெல்லாம் 10 முதல் 12 ஆண்டுகளுக்குள் நிறைவடைந்து விட்டால், மனிதர்களை அங்கு கொண்டு செல்லும் நிலையை எட்டிவிடலாம்” என்று கூறியிருக்கிறார்.

Tags: ISROSomnath
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸ் கோழைகளின் கூட்டம்: ஜோ பைடன் கடும் விமர்சனம்!

Next Post

27 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.74,000 கோடி திட்டங்கள் – சென்னை துறைமுகம் அதிரடி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies