மனிதனை நிலவுக்கு அனுப்புவது எப்போது? இஸ்ரோ தலைவர் பேட்டி!
Jun 15, 2026, 02:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனிதனை நிலவுக்கு அனுப்புவது எப்போது? இஸ்ரோ தலைவர் பேட்டி!

சிறியவகை ராக்கெட்டுகளை ஏவ குலசேகரப்பட்டினம்தான் பெஸ்ட்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 16, 2023, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மனிதர்களை நிலவுக்குக் கொண்டு செல்வதற்கு பெரிய ராக்கெட்டை தயாரிக்க வேண்டும். இப்பணிகள் 10 முதல் 12 ஆண்டுகளுக்குள் நிறைவடைந்து விட்டால், மனிதர்களை நிலவுக்குக் கொண்டு செல்லும் நிலையை எட்டி விடலாம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியிருக்கிறார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மகேந்திரகிரியில் இஸ்ரோவின் உந்துவிசை வளாகம் இயங்கி வருகிறது. இங்குதான் ராக்கெட்டுக்கான உதிரி பாகங்களை இஸ்ரோ தயாரிக்கிறது. மேலும், திரவ இன்ஜின் சோதனை உள்ளிட்ட சிக்கலான பணிகளும் இங்குதான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குலசேகரப்பட்டினத்தில் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த ஏவுதளம் அருகே இலங்கைத் தீவு இருப்பதால், ஏவப்படும் அனைத்து ராக்கெட்டுகளும் அத்தீவைச் சுற்றி செல்ல வேண்டி இருக்கிறது. இதனால், ராக்கெட்டின் பேலோடு திறன் குறைந்து விடுகிறது. இதன் காரணமாக, இங்கிருந்து சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவுவது சிரமமாக இருக்கிறது.

எனவே, சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவுவதற்கு தென் பகுதிதான் சிறந்தது. அந்த வகையில், கன்னியாகுமரியிலிருந்து ஏவினால் சிறந்ததாக இருக்கும். ஆனால், கன்னியாகுமரியில் அவ்வளவு பெரிய இடம் இல்லை. எனவே, தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் அரசு 2,000 ஏக்கர் நிலம் ஒதுக்கி இருக்கிறது. நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது. இங்கிருந்து சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவுவது சிறப்பனதாக இருக்கும்.

சந்திராயன்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டிருக்கிறது. அந்த அனுபவத்தின் அடிப்படையில், அடுத்தடுத்த தரையிறக்கம் நடைபெறும். முதலில், நிலவிலிருந்து மாதிரிகள் திரும்பி வருவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு, ரோபாட் அங்கிருந்து திரும்பி பூமிக்கு வரவேண்டும். அதற்கான திட்டங்களை தயாரிக்க வேண்டும். மேலும், மனிதர்களை அனுப்ப பெரிய அளவிலான ராக்கெட்டை வடிவமைக்க வேண்டும்.

தற்போது இருக்கும் ராக்கெட்டில் மனிதனை கொண்டு செல்வதற்கான வசதிகள் இருக்காது. இதுவெறும் 4.5 டன் எடை கொண்டதுதான். ஆகவே, 12.5 டன் எடை கொண்ட ராக்கெட்டை தயாரிக்க வேண்டும். இவையெல்லாம் 10 முதல் 12 ஆண்டுகளுக்குள் நிறைவடைந்து விட்டால், மனிதர்களை அங்கு கொண்டு செல்லும் நிலையை எட்டிவிடலாம்” என்று கூறியிருக்கிறார்.

Tags: ISROSomnath
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸ் கோழைகளின் கூட்டம்: ஜோ பைடன் கடும் விமர்சனம்!

Next Post

27 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.74,000 கோடி திட்டங்கள் – சென்னை துறைமுகம் அதிரடி!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies