நவராத்திரி விழா: ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் !
Oct 5, 2025, 06:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நவராத்திரி விழா: ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் !

Web Desk by Web Desk
Oct 16, 2023, 04:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இன்று நவராத்திரி திருவிழா தொடங்கியது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த நவராத்திரி திருவிழாவில் முதல் நாளான இன்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மீனாட்சி அம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமானது நவராத்திரி திருவிழாவாகும். அம்மன் சன்னதியிலுள்ள இரண்டாம் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ள மண்டபத்தில் நவராத்திரி கொலு அமைக்கப்படும்.

தெற்குப்புற மண்டபம் தீத்தியப்பச்செட்டி என்பவரால் கி.பி.1565-ஆம் ஆண்டு கட்டப்பட்டது என கோவில் வரலாறு கூறுகிறது. நவராத்திரி விழாவின் போது கொலு பொம்மைகள் இந்த மண்டபத்தில் வைக்கப்படுவதால் இது கொலு மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது.

நவராத்திரி விழா என்பது இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என ஒவ்வொரு சக்திக்கும் மூன்று நாட்கள் என மொத்தம் ஒன்பது நாட்கள் நடைபெறும். இந்த விழா திருமலை நாயக்கர் காலத்தில் துவங்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஒன்பது நாட்களும் அம்மன் பல்வேறு விதமான அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சிதருவாள்.

முதல் நாள் ராஜராஜேஸ்வரி, 2-ஆம் நாள் அர்ஜீனனுக்கு பாசுபதம் அருளியது, 3-ஆம் நாள் ஏக பாத மூர்த்தி, 4-ஆம் நாள் கால் மாறி ஆடிய படலம், 5-ஆம் நாள் தபசு காட்சி, 6-ஆம் நாள் ஊஞ்சல், 7-ஆம் நாள் சண்டேசா அனுக்கிரஹ மூர்த்தி, 8-ஆம் நாள் மகிஷாசுரமர்த்தினி, 9-ஆம் நாள் சிவபூஜை, என அம்மன் காட்சி அளிப்பார்.

இதில் மகிஷனை அம்மன் கொன்ற வெற்றி நாள்தான் விஜயதசமியாக 10-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மாணவ, மாணவியரின் 108 வீணை வழிபாடு வெகுவிமரிசையாக நடைபெறும்.

நவராத்தி திருவிழாவின் முதல்நாளான இன்று மீனாட்சி அம்மன், ராஜராஜேஸ்வரி திருக்கோலத்தில் காட்சியளித்தார். கொலு மண்டபத்தின் நவராத்திரி கொலுவைக் கண்டு களித்த பக்தர்கள், அம்மனின் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தையும் கண்டு அருளாசி பெற்றுச் சென்றனர். நவராத்திரி விழா நடைபெறும் 10 நாட்களும் பரதநாட்டியம், பக்தி இன்னிசை கச்சேரிகள் நடைபெறும்.

Tags: MaduraiNavratri festival: Goddess Meenakshi in Rajarajeshwari decoration!
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு இலஞ்சம் வாங்கிய திரிணாமுல் எம்.பி!

Next Post

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு! – நாளைத் தொடக்கம்!

Related News

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

உலகின் மிக உயரமான பகுதியில் சாலை – எல்லை சாலைகள் அமைப்பு சாதனை!

சுதேசி உணர்வோடு தீபாவளியை கொண்டாடுவோம் – உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு!

நெல்லையில் பல அஜித்குமார்கள் உருவாக அடித்தளமிடும் அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன்!

தவெக நிர்வாகிகள் முன்ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை – நிலச்சரிவில் 14 பேர் பலி!

மூணாறு அருகே தமிழக சுற்றுலா பயணிகளை தாக்கிய போதைக்கும்பல் – 3 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies