குஜராத்தில் "கேசரிய கர்பா" நிகழ்ச்சியில் பங்கேற்ற அமித்ஷா!
Jul 25, 2025, 09:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்தில் “கேசரிய கர்பா” நிகழ்ச்சியில் பங்கேற்ற அமித்ஷா!

Web Desk by Web Desk
Oct 16, 2023, 04:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நவராத்திரி விழாவை முன்னிட்டு, குஜராத்தின் காந்திநகரில் நடந்த ‘கேசரிய கர்பா’ நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.

நாடு முழுவதும் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று, காந்திநகரில் உள்ள சஹாய் அறக்கட்டளையால் நவராத்திரி கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். அப்போது, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் மாதிரி, அறக்கட்டளை சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கேசரிய கர்பா நிகழ்ச்சியை உற்சாகமாகக் கண்டு களித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 3 நாள் பயணமாக குஜராத் மாநிலத்துக்கு 13-ம் தேதி இரவு புறப்பட்டுச் சென்றார். 14-ம் தேதி காந்திநகர் தொகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுடன் கலந்துரையாடியவர், பின்னர் அக்குழந்தைகளை கேமிங் மையத்துக்கு அழைத்துச் சென்று, குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தார். பின்னர், அன்றையதினம் இரவு,  அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை கண்டு களித்தார்.

15-ம் தேதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களைத் திறந்து வைத்தவர், குஜராத்தின் காந்திநகர் மாவட்டத்தில் கிளர்ச்சியின்போது ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட மான்சாவைச் சேர்ந்த 12 புரட்சியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட “சமாவ் ஷஹீத் நினைவகத்தை” திறந்து வைத்து பேசுகையில், சமாவ் கிராமத்தில் உள்ள ஷஹீத் நினைவிடம் தேசபக்தியை வளர்க்கும் புனித இடமாக இருக்கும் என்றார்.

மேலும், ஒரு நூலகத்தையும் திறந்து வைத்தவர், “எனது ஆளுமையைக் கட்டியெழுப்பியதில் புத்தகங்கள் சிறப்புப் பங்காற்றியுள்ளன. ஒரு நாட்டின் எதிர்காலம் நூலகத்தில் உருவாகிறது. அது ஒருவரின் மொழி மற்றும் கலாச்சாரத்தை அறிய வாய்ப்பளிக்கிறது” என்று கூறினார். 3 நாள் பயணம் முடிந்து அமித்ஷா இன்று இரவு டெல்லி திரும்புவார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags: Kesariya Garba FestivaAmitshaGujrat
ShareTweetSendShare
Previous Post

ஐ.என்.எஸ் பியாஸ் கப்பல் ஒப்பந்தம்!

Next Post

வருமான வரித்துறையினர் சோதனை! 94 கோடி ரொக்கமும், ரூ. 8 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளும் பறிமுதல்!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies