முதல் முறையாக காஷ்மீரின் சாரதா கோவிலில் நவராத்திரி பூஜை: அமித்ஷா பாராட்டு!
Jul 25, 2025, 06:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல் முறையாக காஷ்மீரின் சாரதா கோவிலில் நவராத்திரி பூஜை: அமித்ஷா பாராட்டு!

Web Desk by Web Desk
Oct 16, 2023, 06:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஷர்தா கோவிலில் நவராத்திரி பூஜை நடைபெற்றிருப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் கிஷன்கங்கா ஆற்றின் கரையில் தீட்வால் என்கிற இடத்தில் சாரதா தேவி கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவில் கி.மு. 237-ல் அசோகர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இயற்கைச் சீற்றங்களாலும், அந்நியப் படையெடுப்பு காரணமாகவும் இக்கோவில் பலமுறை சேதமடைந்தது.

இக்கோவில் கடைசியாக 19-ம் நூற்றாண்டில் குலாப் சிங் மகாராஜா என்பவரால் சீரமைக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீர் பண்டிட்களுக்கு இந்த சாரதா கோவில்தான் வணங்கும் கடவுளாக இருந்திருக்கிறது. மேலும், இக்கோவிலில் ஏராளமான நூல்கள் அடங்கிய நூலகம் இருந்திருக்கிறது. இந்த நூல்களை படிப்பதற்காகவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அறிஞர்கள் வந்திருக்கிறார்கள்.

1947-ம் ஆண்டுக்குப் பிறகு இக்கோவிலில் எவ்வித பூஜைகளும் நடந்ததில்லை. ஆகவே, இக்கோவிலை சீரமைத்துத் தருமாறு இந்து பண்டிட்கள் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, மத்திய பா.ஜ.க. இக்கோவில் சீரமைப்புப் பணியைத் தொடங்கியது. இப்பணி முடிந்து, கடந்த மார்ச் மாதம் மத்திய அமைச்சர் அமித்ஷாவால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில்தான், இக்கோவிலில் முதல் முறையாக நவராத்திரி பூஜைகள் நடைபெற்றிருக்கிறது. இதுதான் ஆழ்ந்த ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அமித்ஷா வெளியிட்டிருக்கும் பதிவில், “ஆண்டின் தொடக்கத்தில் சைத்ரா நவராத்திரி பூஜை நடத்தப்பட்டது.

தற்போது, ஷர்தியா நவராத்திரி பூஜையின் மந்திரங்கள் சன்னதியில் ஒலிக்கின்றன. புனரமைப்புக்குப் பிறகு 2023 மார்ச் 23-ம் தேதி கோவிலை தாம் மீண்டும் திறந்தது அதிர்ஷ்டம். இது பள்ளத்தாக்கில் அமைதி திரும்புவதைக் குறிப்பது மட்டுமல்லாமல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் நமது நாட்டின் ஆன்மிக மற்றும் கலாச்சார சுடர் புத்துயிர் பெறுவதையும் குறிக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

It is a matter of profound spiritual significance that for the first time since 1947, the Navratri pujas have been held in the historic Sharda Temple in Kashmir this year. Earlier in the year the Chaitra Navratri Puja was observed and now the mantras of the Shardiya Navratri puja… pic.twitter.com/xWzEfagvPx

— Amit Shah (@AmitShah) October 16, 2023

 

Tags: kasmirAmitshaShardha Temple
ShareTweetSendShare
Previous Post

மைசூர் தசரா மலர் கண்காட்சி – பூக்களால் வடிவமைக்கப்பட்ட சந்திராயன்-3!

Next Post

ஆஸ்திரேலிய அணிக்கு 210 ரன்கள் இலக்கு !

Related News

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்ட மோதல் -11 பேர் கொல்லப்பட்டனர்!

திருவள்ளூர் : பண மோசடி புகாரளித்த சின்னத்திரை நடிகை – போலீசார் விசாரணை!

குளச்சல் அருகே சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies