முதல் முறையாக காஷ்மீரின் சாரதா கோவிலில் நவராத்திரி பூஜை: அமித்ஷா பாராட்டு!
Jan 14, 2026, 02:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல் முறையாக காஷ்மீரின் சாரதா கோவிலில் நவராத்திரி பூஜை: அமித்ஷா பாராட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 16, 2023, 06:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஷர்தா கோவிலில் நவராத்திரி பூஜை நடைபெற்றிருப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் கிஷன்கங்கா ஆற்றின் கரையில் தீட்வால் என்கிற இடத்தில் சாரதா தேவி கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவில் கி.மு. 237-ல் அசோகர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இயற்கைச் சீற்றங்களாலும், அந்நியப் படையெடுப்பு காரணமாகவும் இக்கோவில் பலமுறை சேதமடைந்தது.

இக்கோவில் கடைசியாக 19-ம் நூற்றாண்டில் குலாப் சிங் மகாராஜா என்பவரால் சீரமைக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீர் பண்டிட்களுக்கு இந்த சாரதா கோவில்தான் வணங்கும் கடவுளாக இருந்திருக்கிறது. மேலும், இக்கோவிலில் ஏராளமான நூல்கள் அடங்கிய நூலகம் இருந்திருக்கிறது. இந்த நூல்களை படிப்பதற்காகவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அறிஞர்கள் வந்திருக்கிறார்கள்.

1947-ம் ஆண்டுக்குப் பிறகு இக்கோவிலில் எவ்வித பூஜைகளும் நடந்ததில்லை. ஆகவே, இக்கோவிலை சீரமைத்துத் தருமாறு இந்து பண்டிட்கள் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, மத்திய பா.ஜ.க. இக்கோவில் சீரமைப்புப் பணியைத் தொடங்கியது. இப்பணி முடிந்து, கடந்த மார்ச் மாதம் மத்திய அமைச்சர் அமித்ஷாவால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில்தான், இக்கோவிலில் முதல் முறையாக நவராத்திரி பூஜைகள் நடைபெற்றிருக்கிறது. இதுதான் ஆழ்ந்த ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அமித்ஷா வெளியிட்டிருக்கும் பதிவில், “ஆண்டின் தொடக்கத்தில் சைத்ரா நவராத்திரி பூஜை நடத்தப்பட்டது.

தற்போது, ஷர்தியா நவராத்திரி பூஜையின் மந்திரங்கள் சன்னதியில் ஒலிக்கின்றன. புனரமைப்புக்குப் பிறகு 2023 மார்ச் 23-ம் தேதி கோவிலை தாம் மீண்டும் திறந்தது அதிர்ஷ்டம். இது பள்ளத்தாக்கில் அமைதி திரும்புவதைக் குறிப்பது மட்டுமல்லாமல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் நமது நாட்டின் ஆன்மிக மற்றும் கலாச்சார சுடர் புத்துயிர் பெறுவதையும் குறிக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

It is a matter of profound spiritual significance that for the first time since 1947, the Navratri pujas have been held in the historic Sharda Temple in Kashmir this year. Earlier in the year the Chaitra Navratri Puja was observed and now the mantras of the Shardiya Navratri puja… pic.twitter.com/xWzEfagvPx

— Amit Shah (@AmitShah) October 16, 2023

 

Tags: kasmirAmitshaShardha Temple
ShareTweetSendShare
Previous Post

மைசூர் தசரா மலர் கண்காட்சி – பூக்களால் வடிவமைக்கப்பட்ட சந்திராயன்-3!

Next Post

ஆஸ்திரேலிய அணிக்கு 210 ரன்கள் இலக்கு !

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies