முதல் முறையாக காஷ்மீரின் சாரதா கோவிலில் நவராத்திரி பூஜை: அமித்ஷா பாராட்டு!
Sep 13, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல் முறையாக காஷ்மீரின் சாரதா கோவிலில் நவராத்திரி பூஜை: அமித்ஷா பாராட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 16, 2023, 06:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஷர்தா கோவிலில் நவராத்திரி பூஜை நடைபெற்றிருப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் கிஷன்கங்கா ஆற்றின் கரையில் தீட்வால் என்கிற இடத்தில் சாரதா தேவி கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவில் கி.மு. 237-ல் அசோகர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இயற்கைச் சீற்றங்களாலும், அந்நியப் படையெடுப்பு காரணமாகவும் இக்கோவில் பலமுறை சேதமடைந்தது.

இக்கோவில் கடைசியாக 19-ம் நூற்றாண்டில் குலாப் சிங் மகாராஜா என்பவரால் சீரமைக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீர் பண்டிட்களுக்கு இந்த சாரதா கோவில்தான் வணங்கும் கடவுளாக இருந்திருக்கிறது. மேலும், இக்கோவிலில் ஏராளமான நூல்கள் அடங்கிய நூலகம் இருந்திருக்கிறது. இந்த நூல்களை படிப்பதற்காகவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அறிஞர்கள் வந்திருக்கிறார்கள்.

1947-ம் ஆண்டுக்குப் பிறகு இக்கோவிலில் எவ்வித பூஜைகளும் நடந்ததில்லை. ஆகவே, இக்கோவிலை சீரமைத்துத் தருமாறு இந்து பண்டிட்கள் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, மத்திய பா.ஜ.க. இக்கோவில் சீரமைப்புப் பணியைத் தொடங்கியது. இப்பணி முடிந்து, கடந்த மார்ச் மாதம் மத்திய அமைச்சர் அமித்ஷாவால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில்தான், இக்கோவிலில் முதல் முறையாக நவராத்திரி பூஜைகள் நடைபெற்றிருக்கிறது. இதுதான் ஆழ்ந்த ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அமித்ஷா வெளியிட்டிருக்கும் பதிவில், “ஆண்டின் தொடக்கத்தில் சைத்ரா நவராத்திரி பூஜை நடத்தப்பட்டது.

தற்போது, ஷர்தியா நவராத்திரி பூஜையின் மந்திரங்கள் சன்னதியில் ஒலிக்கின்றன. புனரமைப்புக்குப் பிறகு 2023 மார்ச் 23-ம் தேதி கோவிலை தாம் மீண்டும் திறந்தது அதிர்ஷ்டம். இது பள்ளத்தாக்கில் அமைதி திரும்புவதைக் குறிப்பது மட்டுமல்லாமல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் நமது நாட்டின் ஆன்மிக மற்றும் கலாச்சார சுடர் புத்துயிர் பெறுவதையும் குறிக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

It is a matter of profound spiritual significance that for the first time since 1947, the Navratri pujas have been held in the historic Sharda Temple in Kashmir this year. Earlier in the year the Chaitra Navratri Puja was observed and now the mantras of the Shardiya Navratri puja… pic.twitter.com/xWzEfagvPx

— Amit Shah (@AmitShah) October 16, 2023

 

Tags: kasmirAmitshaShardha Temple
Share
Tweet
SendShare
Previous Post

மைசூர் தசரா மலர் கண்காட்சி – பூக்களால் வடிவமைக்கப்பட்ட சந்திராயன்-3!

Next Post

ஆஸ்திரேலிய அணிக்கு 210 ரன்கள் இலக்கு !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies