ஹமாஸ் தீவிரவாதிகளை கூண்டோடு அழிக்காமல் ஓயமாட்டோம்!
Mar 15, 2026, 02:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸ் தீவிரவாதிகளை கூண்டோடு அழிக்காமல் ஓயமாட்டோம்!

ரஷ்ய அதிபரிடம் இஸ்ரேல் பிரதமர் உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 17, 2023, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் இராணுவக் கட்டமைப்பு மற்றும் நிர்வாகத் திறனை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் தொடரும் என்று ரஷ்ய அதிபர் புடினுடனான தொலைபேசி உரையாடலின் போது, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவி, கண்ணில் பட்ட இஸ்ரேலியர்களை எல்லாம் குருவிகளை சுடுவதுபோல சுட்டுக் கொன்றனர். மேலும், சிறுவர்கள், முதியவர்களின் தலைகளை துண்டித்தும், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு தற்போது இஸ்ரேல் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்த நிலையில், இஸ்ரேல் பதிலடியில் ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட இரண்டு மடங்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். காஸா நகர பலி 3,000-த்தை தாண்டி விட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இஸ்ரேல் இராணுவத்திடம் தப்பிப்பதற்காக அப்பாவி மக்களை கேடயமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புடின், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அப்போது, ஹமாஸ் தீவிரவாதிகளை வேரோடு அழிக்காமல் ஓயமாட்டோம் என்று நெதன்யாகு தெரிவித்ததாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “ரஷ்ய அதிபர் புடின், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். கொடூர கொலைகாரர்களால் இஸ்ரேல் பலத்த சேதங்களை சந்தித்திருக்கிறது. இதற்குக் காரணமான ஹமாஸ் தீவிரவாதிகளையும், அந்த அமைப்பின் இராணுவக் கட்டமைப்பு மற்றும் நிர்வாக திறனையும் அழிக்கும் வரை தாக்குதல் தொடர்ந்து நடக்கும். ஹமாஸ் தீவிரவாதிகளை அழித்தொழிக்கும் வரை இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறது.

அதேபோல, ரஷ்ய அதிபர் மற்றும் இஸ்ரேல் அதிபர் தொலைபேசியில் பேசியதை உறுதிப்படுத்தும் வகையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இஸ்ரேல் – காஸா இடையே வன்முறை மேலும் தீவிரமடையாமல் இருக்க ரஷ்யா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், இரு தரப்புக்கும் இடையேயான இத்தாக்குதலால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்தும் அதிபர் புடின் விளக்கிக் கூறினார். இஸ்ரேலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை அதிபர் புடின் தெரிவித்தார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: putinPresidentIsraelRussianPM Netanyagu
ShareTweetSendShare
Previous Post

நாளை இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

Next Post

திருமண ஜோடிகளின் விருப்ப இடமாக மாறும் காஷ்மீர்!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies