ஹமாஸ் தீவிரவாதிகளை கூண்டோடு அழிக்காமல் ஓயமாட்டோம்!
Jul 26, 2025, 06:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸ் தீவிரவாதிகளை கூண்டோடு அழிக்காமல் ஓயமாட்டோம்!

ரஷ்ய அதிபரிடம் இஸ்ரேல் பிரதமர் உறுதி!

Web Desk by Web Desk
Oct 17, 2023, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் இராணுவக் கட்டமைப்பு மற்றும் நிர்வாகத் திறனை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் தொடரும் என்று ரஷ்ய அதிபர் புடினுடனான தொலைபேசி உரையாடலின் போது, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவி, கண்ணில் பட்ட இஸ்ரேலியர்களை எல்லாம் குருவிகளை சுடுவதுபோல சுட்டுக் கொன்றனர். மேலும், சிறுவர்கள், முதியவர்களின் தலைகளை துண்டித்தும், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு தற்போது இஸ்ரேல் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்த நிலையில், இஸ்ரேல் பதிலடியில் ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட இரண்டு மடங்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். காஸா நகர பலி 3,000-த்தை தாண்டி விட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இஸ்ரேல் இராணுவத்திடம் தப்பிப்பதற்காக அப்பாவி மக்களை கேடயமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புடின், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அப்போது, ஹமாஸ் தீவிரவாதிகளை வேரோடு அழிக்காமல் ஓயமாட்டோம் என்று நெதன்யாகு தெரிவித்ததாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “ரஷ்ய அதிபர் புடின், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். கொடூர கொலைகாரர்களால் இஸ்ரேல் பலத்த சேதங்களை சந்தித்திருக்கிறது. இதற்குக் காரணமான ஹமாஸ் தீவிரவாதிகளையும், அந்த அமைப்பின் இராணுவக் கட்டமைப்பு மற்றும் நிர்வாக திறனையும் அழிக்கும் வரை தாக்குதல் தொடர்ந்து நடக்கும். ஹமாஸ் தீவிரவாதிகளை அழித்தொழிக்கும் வரை இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறது.

அதேபோல, ரஷ்ய அதிபர் மற்றும் இஸ்ரேல் அதிபர் தொலைபேசியில் பேசியதை உறுதிப்படுத்தும் வகையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இஸ்ரேல் – காஸா இடையே வன்முறை மேலும் தீவிரமடையாமல் இருக்க ரஷ்யா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், இரு தரப்புக்கும் இடையேயான இத்தாக்குதலால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்தும் அதிபர் புடின் விளக்கிக் கூறினார். இஸ்ரேலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை அதிபர் புடின் தெரிவித்தார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: IsraelRussianPM NetanyaguputinPresident
ShareTweetSendShare
Previous Post

நாளை இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

Next Post

திருமண ஜோடிகளின் விருப்ப இடமாக மாறும் காஷ்மீர்!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Load More

அண்மைச் செய்திகள்

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies