விஏஓ-வை லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி: திமுக நிர்வாகிகள் கைது!
Aug 21, 2025, 07:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விஏஓ-வை லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி: திமுக நிர்வாகிகள் கைது!

Web Desk by Web Desk
Oct 18, 2023, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் பழநியில், சட்டவிரோதமாக மண் அள்ளியதைத் தடுத்து நிறுத்திய ஆயக்குடி விஏஓ-வை, லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற தி.மு.க., நிர்வாகிகள் சக்திவேல், பாஸ்கரன், இரமேஷ், காளிமுத்து ஆகியோர் காவல்துறை கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி பகுதியில் எவ்வித அனுமதியின்றி மணல் அள்ளுவதாகப் பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளனர். பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி, உதவியாளர் மகுடீஸ்வரன் மற்றும் பொதுமக்களுடன் சம்பவம் இடத்திற்குச் சென்று, மணல் அள்ளிய லாரிகளை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில், எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் ஆயக்குடி பகுதியில் மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து காவல் நிலையத்திற்கு லாரிகளை கொண்டு செல்லுமாறு வி.ஏ.ஓ கருப்பசாமி கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து லாரிகளை எடுத்துக்கொண்டு ஆயக்குடி காவல் நிலையம் செல்வதற்காக லாரிகளை முன்னால் செல்ல விட்டு பின்னால் வி.ஏ.ஓ, அவருடைய உதவியாளர் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென லாரிகளை வேகமாக இயக்கியும், பின்னால் கதவைத் திறந்து விட்டு மண்ணை மேலே கொட்டியும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த வி.ஏ.ஓ கருப்புசாமி ஆயக்குடி காவல் நிலையத்திற்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் மீதும், கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு லாரியுடன் தப்பி ஓடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வி.ஏ.ஓ மற்றும் அவரது உதவியாளர் ஆயக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விஏஓ மற்றும் உதவியாளரைக் கொல்ல முயன்ற புகாரில் திமுக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஆயக்குடி விஏஓ வை வாகனம் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த தி.மு.க., நிர்வாகிகள் சக்திவேல், பாஸ்கரன், இரமேஷ், காளிமுத்து ஆகியோரை காவல்துறை கைது செய்தது.

Tags: Arrestvao
ShareTweetSendShare
Previous Post

குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை இரயில் இரத்து!

Next Post

நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் : வெல்லப்போவது யார் ?

Related News

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies