நேபாளம் உட்பட மேலும் 7 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி: மத்திய அரசு அனுமதி!
Mar 15, 2026, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேபாளம் உட்பட மேலும் 7 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி: மத்திய அரசு அனுமதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 18, 2023, 05:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நேபாளம், கேமரூன், கோட் டி ஐவரி, கினியா குடியரசு, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு வெவ்வேறு அளவுகளில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.

உள்நாட்டில் விலை உயர்வைத் தடுக்கும் வகையிலும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும், குறைந்தபட்ச வரி விதிப்பின் மூலம் அரிசி ஏற்றுமதியை முற்றிலுமாகத் தடுக்க முடியும் என்று மத்திய அரசு கருதியது.

இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி பாஸ்மதி அல்லாது வெள்ளை அரிசி மீது 20 சதவீத வரி விதிப்பு செய்தது. அப்போது, இந்த வரி விதிப்பு அக்டோபர் 16-ம் தேதி நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது. ஆனால், திடீரென கடந்த வாரம் 2024 மார்ச் 31-ம் தேதிவரை இந்த வரி விதிப்பு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்தது.

இதன் பிறகு, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை வழங்குமாறு இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தன. இதையடுத்து, மேற்கண்ட இரு நாடுகளுக்கு மட்டும் வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய பா.ஜ.க. அரசு அளித்திருந்தது.

மேலும், ஏற்றுமதிக் கொள்கையில் திருத்தம் செய்யும்போது, ​​மற்ற நாடுகளின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் வழங்கிய அனுமதியின் அடிப்படையிலும், அவர்களின் அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையிலும் ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்று தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், நேபாளம், பங்களாதேஷ், சீனா, கோட் டி ஐவரி, டோகோ, செனகல், கினியா, வியட்நாம், ஜிபூட்டி, மடகாஸ்கர், கேமரூன் சோமாலியா, மலேசியா பிலிப்பைன்ஸ் மற்றும் லைபீரியா ஆகிய நாடுகள் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை வழங்கும்படி கேட்டுக் கொண்டன.

இதைத் தொடர்ந்து, நேபாளம், கேமரூன், கோட் டி ஐவரி, கினியா குடியரசு, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய 7 நாடுகளுக்கு வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த நாடுகளுக்கான ஏற்றுமதிகள் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் மூலம் அனுமதிக்கப்படுகிறது என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் இருந்து பாஸ்மதி அல்லாத அரிசியை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளில் மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனின் நாடும் ஒன்று. ஏற்கெனவே, 2022 செப்டம்பரில் இந்தியா உடைந்த அரிசியை ஏற்றுமதி செய்வதைத் தடை செய்தது. பின்னர்,நவம்பர் மாதம் தடையை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

Tags: riceExport7 countries
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : புள்ளி பட்டியல் !

Next Post

சர்க்கரை ஏற்றுமதி: கட்டுப்பாடு நீட்டிப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies