நேபாளம் உட்பட மேலும் 7 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி: மத்திய அரசு அனுமதி!
Jul 25, 2025, 07:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேபாளம் உட்பட மேலும் 7 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி: மத்திய அரசு அனுமதி!

Web Desk by Web Desk
Oct 18, 2023, 05:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நேபாளம், கேமரூன், கோட் டி ஐவரி, கினியா குடியரசு, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு வெவ்வேறு அளவுகளில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.

உள்நாட்டில் விலை உயர்வைத் தடுக்கும் வகையிலும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும், குறைந்தபட்ச வரி விதிப்பின் மூலம் அரிசி ஏற்றுமதியை முற்றிலுமாகத் தடுக்க முடியும் என்று மத்திய அரசு கருதியது.

இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி பாஸ்மதி அல்லாது வெள்ளை அரிசி மீது 20 சதவீத வரி விதிப்பு செய்தது. அப்போது, இந்த வரி விதிப்பு அக்டோபர் 16-ம் தேதி நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது. ஆனால், திடீரென கடந்த வாரம் 2024 மார்ச் 31-ம் தேதிவரை இந்த வரி விதிப்பு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்தது.

இதன் பிறகு, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை வழங்குமாறு இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தன. இதையடுத்து, மேற்கண்ட இரு நாடுகளுக்கு மட்டும் வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய பா.ஜ.க. அரசு அளித்திருந்தது.

மேலும், ஏற்றுமதிக் கொள்கையில் திருத்தம் செய்யும்போது, ​​மற்ற நாடுகளின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் வழங்கிய அனுமதியின் அடிப்படையிலும், அவர்களின் அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையிலும் ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்று தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், நேபாளம், பங்களாதேஷ், சீனா, கோட் டி ஐவரி, டோகோ, செனகல், கினியா, வியட்நாம், ஜிபூட்டி, மடகாஸ்கர், கேமரூன் சோமாலியா, மலேசியா பிலிப்பைன்ஸ் மற்றும் லைபீரியா ஆகிய நாடுகள் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை வழங்கும்படி கேட்டுக் கொண்டன.

இதைத் தொடர்ந்து, நேபாளம், கேமரூன், கோட் டி ஐவரி, கினியா குடியரசு, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய 7 நாடுகளுக்கு வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த நாடுகளுக்கான ஏற்றுமதிகள் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் மூலம் அனுமதிக்கப்படுகிறது என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் இருந்து பாஸ்மதி அல்லாத அரிசியை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளில் மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனின் நாடும் ஒன்று. ஏற்கெனவே, 2022 செப்டம்பரில் இந்தியா உடைந்த அரிசியை ஏற்றுமதி செய்வதைத் தடை செய்தது. பின்னர்,நவம்பர் மாதம் தடையை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

Tags: riceExport7 countries
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : புள்ளி பட்டியல் !

Next Post

சர்க்கரை ஏற்றுமதி: கட்டுப்பாடு நீட்டிப்பு!

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies