தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இராணுவம் முக்கியப் பங்கு வகிக்கிறது! - ராஜ்நாத் சிங்.
Mar 15, 2026, 03:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இராணுவம் முக்கியப் பங்கு வகிக்கிறது! – ராஜ்நாத் சிங்.

Murugesan M by Murugesan M
Oct 18, 2023, 07:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராணுவத் தளபதிகள் மாநாட்டில் இந்திய இராணுவத்தின் மூத்த அதிகாரிகளிடையே பாதுகாப்புத் துறை அமைச்சர் உரையாற்றினார்.

2023 ஆம் ஆண்டின் இரண்டாவது இராணுவத் தளபதிகள் மாநாடு, அக்டோபர் 16 அன்று  காணொலி மூலமாகவும் நேரடியாகவும் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது, தற்போதுள்ள பாதுகாப்பு சூழ்நிலை, எல்லைகள் மற்றும் உள்பகுதியில் உள்ள நிலைமை, தற்போதைய பாதுகாப்பு நடைமுறையின் சவால்கள் ஆகியவற்றின் அனைத்து அம்சங்களையும் இராணுவத் தளபதிகள் விரிவாக விவாதித்தனர்.

 

நிறுவன சீரமைப்பு, தளவாடங்கள், நிர்வாகம் மற்றும் மனித வள மேலாண்மை தொடர்பான பிரச்சனைகளையும் இந்த மாநாடு கவனத்தில் கொண்டது.

மாநாட்டின் மூன்றாவது நாளின் சிறப்பம்சமாக  பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங், இராணுவத்தின் மூத்த  அதிகாரிகளிடையே உரையாற்றினார்.

அப்போது உரையாற்றியவர்,

நமது எல்லைகளைப் பாதுகாப்பதிலும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும் இராணுவம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த உயர்நிலை அதிகாரிகள் மாநாடு ஆயுதப்படைகளுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டிற்கும் நன்மை பயக்கும் என்று தெரிவித்தார்.

தற்போதைய சிக்கலான மற்றும் தெளிவற்ற உலக நிலைமை குறித்து வியூகங்களைத் திட்டமிடும்போதும் வகுக்கும்போதும் ஆயுதப்படைகள் இந்த அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். எதிர்பாராதவற்றை எதிர்பார்க்கவும், அதன்  அடிப்படையில் திட்டமிடவும், வியூகம் வகுக்கவும், அதற்கேற்ப தயாராகவும் இருக்க வேண்டும்.

வடக்கு எல்லைகளில், எந்தவொரு சூழ்நிலையிலும், இராணுவத்தின் மீதான முழு நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இருப்பினும், அமைதித் தீர்வுக்கான பேச்சுவார்த்தை அனைத்து  நிலைகளிலும் தொடரும் என்று  உறுதிபடத் தெரிவித்தார்.

“ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தலைக் கையாள்வதில் சி.ஏ.பி.எஃப் / காவல் படைகள் மற்றும் இராணுவத்திற்கு இடையேயான சிறந்த ஒருங்கிணைப்பு உள்ளது.  இது தொடர வேண்டும் என்று கூறினார்.

சமீபத்திய 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இராணுவ விளையாட்டு வீரர்களின் சிறப்பான செயல்திறனுக்காக தனது பாராட்டை தெரிவித்தார்.  முன்னணி கல்வி நிறுவனங்கள் உட்பட சிவில் தொழில்களுடன் இணைந்து, முக்கிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும், அதன் மூலம் ‘உள்நாட்டுமயமாக்கல் என்பதில் இருந்து நவீனமயமாக்கல்’ அல்லது ‘தற்சார்பு இந்தியா’ என்ற இலக்கை நோக்கி முன்னேறவும் இராணுவம் மேற்கொள்ளும் முயற்சிகளை பாராட்டினார்.

இராணுவத்தைப் பற்றி  நாடு பெருமிதம் கொள்கிறது என்றும், சீர்திருத்தங்கள் மற்றும் திறன்களை நவீனமாக்கும் பாதையில் இராணுவத்தின் முன்னோக்கிய நகர்வுக்கு உதவி செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது என்றார்.

Tags: Rajnath Singhcentral government minister
ShareTweetSendShare
Previous Post

நேஷனல் ஹெரால்டு ஊழல் பற்றி பேசலாமா? ராகுலுக்கு பா.ஜ.க. பதிலடி!

Next Post

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies