நேஷனல் ஹெரால்டு ஊழல் பற்றி பேசலாமா? ராகுலுக்கு பா.ஜ.க. பதிலடி!
Sep 14, 2026, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேஷனல் ஹெரால்டு ஊழல் பற்றி பேசலாமா? ராகுலுக்கு பா.ஜ.க. பதிலடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 18, 2023, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகிலேயே பயங்கர ஊழல்வாதிகள் காந்தி குடும்பத்தினர்தான் என்று பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை உயர்வு குறித்துப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியின் உதவியுடன் அதானி குழுமம் மக்கள் பணத்தையும், நாட்டின் வளங்களையும் திருடுவதாகக் குற்றம்சாட்டி இருந்தார். இதுகுறித்த செய்தி இங்கிலாந்து நாளிதழான பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகி இருந்ததையும் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, உலகிலேயே பயங்கரமான ஊழல்வாதிகள் காந்தி குடும்பத்தினர்தான் என்று ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். தேசியத் தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாட்டியா, “காந்தி குடும்பம்தான் உலகிலேயே மிகவும் ஊழல் நிறைந்த குடும்பம். ராகுல் காந்தி, சோனியா காந்தி இருவரும் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்.

இவர்களில் சோனியா காந்தி ஜாமீனில் இருக்கிறார். ராகுல் காந்தி ஜாமீனே வாங்கவில்லை. பிரதமர் மோடி சொன்னதைப் போல ஊழல் என்பது காங்கிரஸின் டி.என்.ஏ.விலேயே இருக்கிறது. அதானி ஊழல் செய்ததாகப் பேசும் இவர்கள், நேஷனல் ஹெரால்டு ஊழல் மற்றும் ராபர்ட் வதேராவின் ஊழல் பற்றி பேசுவார்களா? தேர்தல் நடக்கவிருக்கும் 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் அழிவை சந்தித்து வருகிறது.

காங்கிரஸுக்குத்தான் பொதுப் பணத்தைக் கொள்ளையடிக்கும் பழக்கம் இருக்கிறது. மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து காந்தி குடும்பத்தின் நலனுக்காக பயன்படுத்துவார்கள். இது ஊழல் காங்கிரஸ் தலைவர்களின் பிறப்புரிமை போன்றது. எதிர்வரும் 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைவர்களின் அகம்பாவத்தையும், ஆணவத்தையும் அழிப்பது பா.ஜ.க.வின் பொறுப்பு” என்றார்.

Tags: bjprahul gandhislamsNational Spokes personGaurav bhatiya
Share
Tweet
SendShare
Previous Post

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் 48 விமானங்கள் ரத்து!

Next Post

தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இராணுவம் முக்கியப் பங்கு வகிக்கிறது! – ராஜ்நாத் சிங்.

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies