ஜி20 டெல்லி பிரகடனம்: செயல்படுத்துவது எப்படி?
Aug 15, 2025, 07:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜி20 டெல்லி பிரகடனம்: செயல்படுத்துவது எப்படி?

பிரதமரின் முதன்மைச் செயலாளர் ஆய்வு!

Web Desk by Web Desk
Oct 18, 2023, 09:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜி20 டெல்லி பிரகடனத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்து, பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடந்தது.

இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு, தேசியத் தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9, 10-ம் தேதிகளில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இம்மாநாட்டில் டெல்லி பிரகடனம் அனைத்து நாடுகளின் தலைவர்களாலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜி20 நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இந்த நிலையில், ஜி20 உச்சிமாநாட்டின் டெல்லி பிரகடனத்தை அமல்படுத்துவது தொடர்பாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், நிதி ஆயோக் துணைத் தலைவர், ஜி20 ஷெர்பா, ஜி20 தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் வெளியுறவு அமைச்சகம், பொருளாதார விவகாரங்கள் துறை, மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அந்தந்த அமைச்சகங்கள் தலைமையில், சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி 7 இணையப் பயிலரங்கங்கள் ஏற்பாடு செய்ய உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, வலுவான, நிலையான, சமநிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி, நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துதல், ஒரு நிலையான எதிர்காலத்திற்கான பசுமை மேம்பாட்டு ஒப்பந்தம், 21-ம் நூற்றாண்டுக்கான பலதரப்பு நிறுவனங்கள், தொழில்நுட்ப மாற்றம் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, தீவிரவாதம் மற்றும் பணமோசடியை எதிர்த்தல் ஆகிய கருப்பொருள்களில் பயிலரங்கள் நடத்த முன்மொழியப்பட்டிருக்கிறது.

மேலும், டெல்லி பிரகடனத்தை திறம்பட செயல்படுத்துவது குறித்து, நாடு முழுவதும் வல்லுநர்களிடமிருந்து நுண்ணறிவுகளைச் சேகரிக்க, பல்வேறு சிந்தனைக் குழுக்களை ஈடுபடுத்த ஒரு கருத்தரங்குக்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதோடு, டெல்லி பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதைத் தொடர்ந்து கண்காணிக்க உயர்மட்ட கண்காணிப்பு அமைப்பு அமைக்கப்படும் என்று முதன்மைச் செயலாளர் கூறினார்.

இது தவிர, டெல்லி உச்சி மாநாட்டின்போது பிரதமர் தனது கருத்துக்களில் முன்மொழிந்த முன்முயற்சியான ஜி20 மெய்நிகர் உச்சி மாநாடு குறித்தும் முதன்மைச் செயலாளர் விவாதித்தார். அப்போது, எந்தவொரு நாடும் இதுபோன்ற மெய்நிகர் உச்சி மாநாட்டை நடத்தியதில்லை. இதுவே முதல் முறை என்பதால், அனைத்து உறுப்பு நாடுகளுக்கும், விருந்தினர் நாடுகளுக்கும் உடனடியாக தகவல்களைப் பரப்ப வேண்டியதன் அவசியத்தை முதன்மைச் செயலாளர் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தின்போது, ​​2023-ம் ஆண்டு நவம்பரில் நடைபெறவுள்ள உலகத் தெற்கு உச்சி மாநாட்டின் 2-வது குரல் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா, முதன்மை செயலாளரிடம் விளக்கினார்.

Tags: PM ModiPrincipal SecretaryP.K.Misra
ShareTweetSendShare
Previous Post

நேபாள அமைச்சர், மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்துள்ளார்!

Next Post

திருச்சியில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு!

Related News

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆப்ரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் : வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்!

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை!

ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் – ஹர்பஜன் சிங்!

புதுச்சேரி : செங்கழுநீர் அம்மன் ஆலயத்தின் ஆடி மாத தேர் திருவிழா!

இந்தியாவின் குரலுக்கு உலக நாடுகள் செவிசாய்க்கின்றன : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies