ஜி20 டெல்லி பிரகடனம்: செயல்படுத்துவது எப்படி?
Jul 29, 2026, 05:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜி20 டெல்லி பிரகடனம்: செயல்படுத்துவது எப்படி?

பிரதமரின் முதன்மைச் செயலாளர் ஆய்வு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 18, 2023, 09:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜி20 டெல்லி பிரகடனத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்து, பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடந்தது.

இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு, தேசியத் தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9, 10-ம் தேதிகளில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இம்மாநாட்டில் டெல்லி பிரகடனம் அனைத்து நாடுகளின் தலைவர்களாலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜி20 நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இந்த நிலையில், ஜி20 உச்சிமாநாட்டின் டெல்லி பிரகடனத்தை அமல்படுத்துவது தொடர்பாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், நிதி ஆயோக் துணைத் தலைவர், ஜி20 ஷெர்பா, ஜி20 தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் வெளியுறவு அமைச்சகம், பொருளாதார விவகாரங்கள் துறை, மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அந்தந்த அமைச்சகங்கள் தலைமையில், சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி 7 இணையப் பயிலரங்கங்கள் ஏற்பாடு செய்ய உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, வலுவான, நிலையான, சமநிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி, நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துதல், ஒரு நிலையான எதிர்காலத்திற்கான பசுமை மேம்பாட்டு ஒப்பந்தம், 21-ம் நூற்றாண்டுக்கான பலதரப்பு நிறுவனங்கள், தொழில்நுட்ப மாற்றம் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, தீவிரவாதம் மற்றும் பணமோசடியை எதிர்த்தல் ஆகிய கருப்பொருள்களில் பயிலரங்கள் நடத்த முன்மொழியப்பட்டிருக்கிறது.

மேலும், டெல்லி பிரகடனத்தை திறம்பட செயல்படுத்துவது குறித்து, நாடு முழுவதும் வல்லுநர்களிடமிருந்து நுண்ணறிவுகளைச் சேகரிக்க, பல்வேறு சிந்தனைக் குழுக்களை ஈடுபடுத்த ஒரு கருத்தரங்குக்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதோடு, டெல்லி பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதைத் தொடர்ந்து கண்காணிக்க உயர்மட்ட கண்காணிப்பு அமைப்பு அமைக்கப்படும் என்று முதன்மைச் செயலாளர் கூறினார்.

இது தவிர, டெல்லி உச்சி மாநாட்டின்போது பிரதமர் தனது கருத்துக்களில் முன்மொழிந்த முன்முயற்சியான ஜி20 மெய்நிகர் உச்சி மாநாடு குறித்தும் முதன்மைச் செயலாளர் விவாதித்தார். அப்போது, எந்தவொரு நாடும் இதுபோன்ற மெய்நிகர் உச்சி மாநாட்டை நடத்தியதில்லை. இதுவே முதல் முறை என்பதால், அனைத்து உறுப்பு நாடுகளுக்கும், விருந்தினர் நாடுகளுக்கும் உடனடியாக தகவல்களைப் பரப்ப வேண்டியதன் அவசியத்தை முதன்மைச் செயலாளர் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தின்போது, ​​2023-ம் ஆண்டு நவம்பரில் நடைபெறவுள்ள உலகத் தெற்கு உச்சி மாநாட்டின் 2-வது குரல் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா, முதன்மை செயலாளரிடம் விளக்கினார்.

Tags: PM ModiPrincipal SecretaryP.K.Misra
ShareTweetSendShare
Previous Post

நேபாள அமைச்சர், மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்துள்ளார்!

Next Post

திருச்சியில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies