ஜி20 டெல்லி பிரகடனம்: செயல்படுத்துவது எப்படி?
Apr 29, 2026, 10:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜி20 டெல்லி பிரகடனம்: செயல்படுத்துவது எப்படி?

பிரதமரின் முதன்மைச் செயலாளர் ஆய்வு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 18, 2023, 09:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜி20 டெல்லி பிரகடனத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்து, பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடந்தது.

இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு, தேசியத் தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9, 10-ம் தேதிகளில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இம்மாநாட்டில் டெல்லி பிரகடனம் அனைத்து நாடுகளின் தலைவர்களாலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜி20 நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இந்த நிலையில், ஜி20 உச்சிமாநாட்டின் டெல்லி பிரகடனத்தை அமல்படுத்துவது தொடர்பாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், நிதி ஆயோக் துணைத் தலைவர், ஜி20 ஷெர்பா, ஜி20 தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் வெளியுறவு அமைச்சகம், பொருளாதார விவகாரங்கள் துறை, மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அந்தந்த அமைச்சகங்கள் தலைமையில், சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி 7 இணையப் பயிலரங்கங்கள் ஏற்பாடு செய்ய உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, வலுவான, நிலையான, சமநிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி, நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துதல், ஒரு நிலையான எதிர்காலத்திற்கான பசுமை மேம்பாட்டு ஒப்பந்தம், 21-ம் நூற்றாண்டுக்கான பலதரப்பு நிறுவனங்கள், தொழில்நுட்ப மாற்றம் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, தீவிரவாதம் மற்றும் பணமோசடியை எதிர்த்தல் ஆகிய கருப்பொருள்களில் பயிலரங்கள் நடத்த முன்மொழியப்பட்டிருக்கிறது.

மேலும், டெல்லி பிரகடனத்தை திறம்பட செயல்படுத்துவது குறித்து, நாடு முழுவதும் வல்லுநர்களிடமிருந்து நுண்ணறிவுகளைச் சேகரிக்க, பல்வேறு சிந்தனைக் குழுக்களை ஈடுபடுத்த ஒரு கருத்தரங்குக்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதோடு, டெல்லி பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதைத் தொடர்ந்து கண்காணிக்க உயர்மட்ட கண்காணிப்பு அமைப்பு அமைக்கப்படும் என்று முதன்மைச் செயலாளர் கூறினார்.

இது தவிர, டெல்லி உச்சி மாநாட்டின்போது பிரதமர் தனது கருத்துக்களில் முன்மொழிந்த முன்முயற்சியான ஜி20 மெய்நிகர் உச்சி மாநாடு குறித்தும் முதன்மைச் செயலாளர் விவாதித்தார். அப்போது, எந்தவொரு நாடும் இதுபோன்ற மெய்நிகர் உச்சி மாநாட்டை நடத்தியதில்லை. இதுவே முதல் முறை என்பதால், அனைத்து உறுப்பு நாடுகளுக்கும், விருந்தினர் நாடுகளுக்கும் உடனடியாக தகவல்களைப் பரப்ப வேண்டியதன் அவசியத்தை முதன்மைச் செயலாளர் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தின்போது, ​​2023-ம் ஆண்டு நவம்பரில் நடைபெறவுள்ள உலகத் தெற்கு உச்சி மாநாட்டின் 2-வது குரல் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா, முதன்மை செயலாளரிடம் விளக்கினார்.

Tags: PM ModiPrincipal SecretaryP.K.Misra
ShareTweetSendShare
Previous Post

நேபாள அமைச்சர், மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்துள்ளார்!

Next Post

திருச்சியில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies