37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!
Mar 15, 2026, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

பனாஜியில் அக்டோபர் 26-ம் தேதி தொடக்கம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 19, 2023, 01:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவா மாநிலம் பனாஜியில் அக்டோபர் 26-ம் தேதி நடைபெறும் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவிருப்பதாக, அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியிருக்கிறார்.

கோவா மாநிலத்தில் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 26-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சூழலில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பேட்மிண்டன் விளையாட்டை இன்று ஷ்யாமா பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சாவந்த், “37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் அக்டோபர் 26-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 26-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இப்போட்டியில் கலந்துகொள்ள வருகைதரும் அனைத்து விளையாட்டு வீரர்களையும் நான் வரவேற்கிறேன்.

இந்த விளையாட்டுப் போட்டிகள் ‘ஒரே நாடு, ஒரே ஆன்மா’ என்கிற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டவை. மேலும், இப்போட்டிகள் 43 பிரிவுகளாக நடைபெறும். ஆகவே, இன்று முதல் நவம்பர் 9-ம் தேதிவரை விளையாட்டுக் கலாசாரத்தைக் கொண்டாடுவோம்” என்று கூறினார். இந்நிகழ்ச்சியில், கோவா விளையாட்டுத்துறை அமைச்சர் கோவிந்த் கவுடே மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பலரும் கலந்துகொண்டனர்.

வரலாற்றில் முதன்முறையாக, கோவா மிகப்பெரிய தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தவிருக்கிறது. இந்த நிகழ்வு, தடகள சிறப்பையும், நட்புறவையும் மற்றும் பல அற்புதமான விளையாட்டுகளின் அறிமுகத்திற்கான களமாக இருக்கும். குஜராத்தில் நடத்தப்பட்ட தேசிய விளையாட்டுப் போட்டிகளின் முந்தைய பதிப்பு 36 பிரிவுகளைக் கொண்டிருந்தது. அதேபோல, 2015-ம் ஆண்டு கேரளாவில் நடந்த போட்டிகளில் 33 பிரிவுகள் அடங்கும்.

இந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் இருந்து வீரர்கள் பங்கேற்கிறார்கள். இந்த ஒலிம்பிக் பாணி பல் விளையாட்டு நிகழ்வு, அக்டோபர் 26 முதல் நவம்பர் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறும். சைக்கிள் பந்தயம் மற்றும் கோல்ப் போட்டிகள் டெல்லியில் நடைபெற உள்ளன.

இந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 7,000-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் ஒலிம்பிக் அல்லாத விளையாட்டுகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். மேலும், 37-வது தேசிய விளையாட்டுப் போட்டியில் பல புதிய விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில், கடற்கரை கால்பந்து, ரோல் பால், கோல்ஃப், செபக்டக்ரா, ஸ்கே தற்காப்புக் கலைகள், கலேரிப்பட்டு மற்றும் பென்காக் சிலாட் ஆகியவை அடங்கும்.  கூடுதலாக, படகுப் பந்தயம் மற்றும் டேக்வாண்டோ ஆகியவையும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

மேலும், பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், லகோரி மற்றும் கட்கா விளையாட்டுகள் ஆர்ப்பாட்ட விளையாட்டுகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இது விளையாட்டுப் போட்டிக்கு ஒரு தனித்துவமான மற்றும் கலாச்சார பரிமாணத்தைக் கொடுக்கும்.

கடந்த காலங்களில் இதுபோன்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் நீரஜ் சோப்ரா, சானியா மிர்சா, மீராபாய் சானு, சஜன் பிரகாஷ், மனு பாக்கர் உட்பட பல முக்கிய இந்திய விளையாட்டு வீரர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modiinauguratenational gamesoctober 26th
ShareTweetSendShare
Previous Post

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

Next Post

திரிபுரா, ஒடிசா மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies