37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!
Jul 27, 2025, 03:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

பனாஜியில் அக்டோபர் 26-ம் தேதி தொடக்கம்!

Web Desk by Web Desk
Oct 19, 2023, 01:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவா மாநிலம் பனாஜியில் அக்டோபர் 26-ம் தேதி நடைபெறும் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவிருப்பதாக, அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியிருக்கிறார்.

கோவா மாநிலத்தில் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 26-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சூழலில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பேட்மிண்டன் விளையாட்டை இன்று ஷ்யாமா பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சாவந்த், “37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் அக்டோபர் 26-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 26-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இப்போட்டியில் கலந்துகொள்ள வருகைதரும் அனைத்து விளையாட்டு வீரர்களையும் நான் வரவேற்கிறேன்.

இந்த விளையாட்டுப் போட்டிகள் ‘ஒரே நாடு, ஒரே ஆன்மா’ என்கிற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டவை. மேலும், இப்போட்டிகள் 43 பிரிவுகளாக நடைபெறும். ஆகவே, இன்று முதல் நவம்பர் 9-ம் தேதிவரை விளையாட்டுக் கலாசாரத்தைக் கொண்டாடுவோம்” என்று கூறினார். இந்நிகழ்ச்சியில், கோவா விளையாட்டுத்துறை அமைச்சர் கோவிந்த் கவுடே மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பலரும் கலந்துகொண்டனர்.

வரலாற்றில் முதன்முறையாக, கோவா மிகப்பெரிய தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தவிருக்கிறது. இந்த நிகழ்வு, தடகள சிறப்பையும், நட்புறவையும் மற்றும் பல அற்புதமான விளையாட்டுகளின் அறிமுகத்திற்கான களமாக இருக்கும். குஜராத்தில் நடத்தப்பட்ட தேசிய விளையாட்டுப் போட்டிகளின் முந்தைய பதிப்பு 36 பிரிவுகளைக் கொண்டிருந்தது. அதேபோல, 2015-ம் ஆண்டு கேரளாவில் நடந்த போட்டிகளில் 33 பிரிவுகள் அடங்கும்.

இந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் இருந்து வீரர்கள் பங்கேற்கிறார்கள். இந்த ஒலிம்பிக் பாணி பல் விளையாட்டு நிகழ்வு, அக்டோபர் 26 முதல் நவம்பர் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறும். சைக்கிள் பந்தயம் மற்றும் கோல்ப் போட்டிகள் டெல்லியில் நடைபெற உள்ளன.

இந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 7,000-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் ஒலிம்பிக் அல்லாத விளையாட்டுகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். மேலும், 37-வது தேசிய விளையாட்டுப் போட்டியில் பல புதிய விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில், கடற்கரை கால்பந்து, ரோல் பால், கோல்ஃப், செபக்டக்ரா, ஸ்கே தற்காப்புக் கலைகள், கலேரிப்பட்டு மற்றும் பென்காக் சிலாட் ஆகியவை அடங்கும்.  கூடுதலாக, படகுப் பந்தயம் மற்றும் டேக்வாண்டோ ஆகியவையும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

மேலும், பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், லகோரி மற்றும் கட்கா விளையாட்டுகள் ஆர்ப்பாட்ட விளையாட்டுகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இது விளையாட்டுப் போட்டிக்கு ஒரு தனித்துவமான மற்றும் கலாச்சார பரிமாணத்தைக் கொடுக்கும்.

கடந்த காலங்களில் இதுபோன்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் நீரஜ் சோப்ரா, சானியா மிர்சா, மீராபாய் சானு, சஜன் பிரகாஷ், மனு பாக்கர் உட்பட பல முக்கிய இந்திய விளையாட்டு வீரர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Tags: national gamesoctober 26thPM Modiinaugurate
ShareTweetSendShare
Previous Post

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

Next Post

திரிபுரா, ஒடிசா மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!

Related News

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies