37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!
Jul 23, 2026, 12:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

பனாஜியில் அக்டோபர் 26-ம் தேதி தொடக்கம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 19, 2023, 01:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவா மாநிலம் பனாஜியில் அக்டோபர் 26-ம் தேதி நடைபெறும் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவிருப்பதாக, அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியிருக்கிறார்.

கோவா மாநிலத்தில் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 26-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சூழலில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பேட்மிண்டன் விளையாட்டை இன்று ஷ்யாமா பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சாவந்த், “37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் அக்டோபர் 26-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 26-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இப்போட்டியில் கலந்துகொள்ள வருகைதரும் அனைத்து விளையாட்டு வீரர்களையும் நான் வரவேற்கிறேன்.

இந்த விளையாட்டுப் போட்டிகள் ‘ஒரே நாடு, ஒரே ஆன்மா’ என்கிற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டவை. மேலும், இப்போட்டிகள் 43 பிரிவுகளாக நடைபெறும். ஆகவே, இன்று முதல் நவம்பர் 9-ம் தேதிவரை விளையாட்டுக் கலாசாரத்தைக் கொண்டாடுவோம்” என்று கூறினார். இந்நிகழ்ச்சியில், கோவா விளையாட்டுத்துறை அமைச்சர் கோவிந்த் கவுடே மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பலரும் கலந்துகொண்டனர்.

வரலாற்றில் முதன்முறையாக, கோவா மிகப்பெரிய தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தவிருக்கிறது. இந்த நிகழ்வு, தடகள சிறப்பையும், நட்புறவையும் மற்றும் பல அற்புதமான விளையாட்டுகளின் அறிமுகத்திற்கான களமாக இருக்கும். குஜராத்தில் நடத்தப்பட்ட தேசிய விளையாட்டுப் போட்டிகளின் முந்தைய பதிப்பு 36 பிரிவுகளைக் கொண்டிருந்தது. அதேபோல, 2015-ம் ஆண்டு கேரளாவில் நடந்த போட்டிகளில் 33 பிரிவுகள் அடங்கும்.

இந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் இருந்து வீரர்கள் பங்கேற்கிறார்கள். இந்த ஒலிம்பிக் பாணி பல் விளையாட்டு நிகழ்வு, அக்டோபர் 26 முதல் நவம்பர் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறும். சைக்கிள் பந்தயம் மற்றும் கோல்ப் போட்டிகள் டெல்லியில் நடைபெற உள்ளன.

இந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 7,000-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் ஒலிம்பிக் அல்லாத விளையாட்டுகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். மேலும், 37-வது தேசிய விளையாட்டுப் போட்டியில் பல புதிய விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில், கடற்கரை கால்பந்து, ரோல் பால், கோல்ஃப், செபக்டக்ரா, ஸ்கே தற்காப்புக் கலைகள், கலேரிப்பட்டு மற்றும் பென்காக் சிலாட் ஆகியவை அடங்கும்.  கூடுதலாக, படகுப் பந்தயம் மற்றும் டேக்வாண்டோ ஆகியவையும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

மேலும், பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், லகோரி மற்றும் கட்கா விளையாட்டுகள் ஆர்ப்பாட்ட விளையாட்டுகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இது விளையாட்டுப் போட்டிக்கு ஒரு தனித்துவமான மற்றும் கலாச்சார பரிமாணத்தைக் கொடுக்கும்.

கடந்த காலங்களில் இதுபோன்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் நீரஜ் சோப்ரா, சானியா மிர்சா, மீராபாய் சானு, சஜன் பிரகாஷ், மனு பாக்கர் உட்பட பல முக்கிய இந்திய விளையாட்டு வீரர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modiinauguratenational gamesoctober 26th
ShareTweetSendShare
Previous Post

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

Next Post

திரிபுரா, ஒடிசா மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!

Related News

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies