மனித சமுதாயத்தின் நலனுக்காக சர்வதேச விண்வெளி ஒத்துழைப்பை இந்தியா ஆதரிக்கிறது : ஜிதேந்திர சிங்!
Oct 26, 2025, 07:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனித சமுதாயத்தின் நலனுக்காக சர்வதேச விண்வெளி ஒத்துழைப்பை இந்தியா ஆதரிக்கிறது : ஜிதேந்திர சிங்!

விண்வெளி தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் இன்றியமையாதவையாக உள்ளன!

Web Desk by Web Desk
Oct 19, 2023, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மனிதர்களின் நலனுக்காக மட்டுமே விண்வெளி பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் சமகால சீன ஆய்வுகளுக்கான மையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், ‘விண்வெளி – உலகளாவிய தலைமைக்கான தேடலில் சீனாவின் இறுதி எல்லை’ என்ற தலைப்பில் ஜிதேந்திர சிங் பங்கேற்றார்.

கூட்டத்தில் உரையாற்றிய ஜிதேந்திர சிங், “வெளிப்படைத் தன்மை, பொறுப்புடமை மற்றும் விண்வெளியின் அமைதியான பயன்பாடு ஆகிய கொள்கைகளை இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.

சீனா உள்பட அனைத்து நாடுகளும் மற்ற நாடுகளுடன் வெளிப்படையான உரையாடலில் ஈடுபட வேண்டும். இதனால் நாம் ஒருவருக்கொருவர் நோக்கங்கள், முயற்சிகளை ரகசியமாகவோ அல்லது சந்தேகமாகவோ இல்லாமல் பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் பாதுகாப்பான, நீடித்த சூழலைப் பாதுகாப்பதை உறுதி செய்யவும் முடியும்.

இந்தியாவின் விண்வெளித் திட்டம் உலகளவில் போட்டியிடக்கூடிய அளவுக்கு சிறந்து விளங்குகிறது. இந்தியாவின் விண்வெளித் திட்டம் முற்றிலும் அமைதியானது. சாதாரண குடிமக்களுக்கு ‘வாழ்க்கையை எளிதாக்க’ உலகின் முன்னணி விண்வெளி நிறுவனங்களுடன் இஸ்ரோ ஒத்துழைப்பை அளித்து வருகிறது.

மனித சமுதாயத்தின் பரந்த நன்மைக்காக சர்வதேச விண்வெளி ஒத்துழைப்புகளை இந்தியா ஆதரிக்கிறது. விண்வெளி அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மோதல்கள் இல்லாமல் பாதுகாக்கப்பட வேண்டும். இதில் இந்தியா உறுதியாக உள்ளது எனத் தெரிவித்தார்.

அமெரிக்காவும் அப்போதைய சோவியத் ஒன்றியமும் 1969 ஆம் ஆண்டில் சந்திரனின் மேற்பரப்பில் ஒரு மனிதனை தரையிறக்குவதற்கு முன்பே தங்கள் விண்வெளிப் பயணத்தைத் தொடங்கியிருந்தன. எனினும், நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை உலகுக்கு அளித்தது நமது நாட்டின் சந்திரயான்தான்.

இந்தியாவின் விண்வெளிப் பயணங்கள் மனித வளங்கள் மற்றும் திறன்களை அடிப்படையாகக் கொண்டு செலவு குறைந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தோல்வியடைந்த ரஷ்யாவின் நிலவு திட்டத்துக்கு ரூ.16,000 கோடி செலவு செய்யப்பட்டது. ஆனால், சந்திரயான்-3 திட்டத்துக்கு ரூ.600 கோடி மட்டுமே செலவானது.

பிரதமர் விரைவு சக்தி, ரயில்வே, நெடுஞ்சாலைகள் மற்றும் நவீன நகரங்கள், வேளாண்மை, நீர்வள வரைபடம், தொலை மருத்துவம் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு துறைகளுக்கு விண்வெளி தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் இன்றியமையாதவையாக உள்ளன. இதன்மூலம், சாமானிய மக்களுக்கு வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது எனத் தெரிவித்தார்.

Tags: Central Ministerjitendra singhNASA
ShareTweetSendShare
Previous Post

இனிப்பு விற்க இலக்கு: ஆவின் பாலகங்களுக்கு நெருக்கடி!

Next Post

தாய்மை அன்பின் சின்னமான ஸ்கந்தமாதா தேவியிடம் பிரதமர் மோடி ஆசி கோரினார்!

Related News

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies