துறைமுகம் சார்ந்த வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறை: நிர்மலா சீதாராமன்!
Oct 7, 2025, 04:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துறைமுகம் சார்ந்த வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறை: நிர்மலா சீதாராமன்!

Web Desk by Web Desk
Oct 19, 2023, 07:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 9 ஆண்டுகளில் துறைமுகம் சார்ந்த வளர்ச்சிக்காக இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

உலகளாவிய கடல்சார் உச்சி மாநாடு 2023 மும்பையில் நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு நாளான இன்று உரையாற்றிய நிர்மலா சீதாராமன், “கடந்த 9 ஆண்டுகளில் இந்திய துறைமுகங்களை மேம்படுத்த மகத்தான முயற்சிகள் எடுக்கப்பட்டது. இதன் காரணம், சரக்குக் கையாளுதல் மற்றும் சரக்கு அளவு 2 மடங்காக அதிகரித்திருக்கிறது. இந்திய துறைமுகங்களின் திருப்புமுனை நேரம் கணிசமாக மேம்பட்டு, உலகின் பல்வேறு நாடுகளை விட சிறப்பாக இருக்கிறது” என்றார்.

கப்பல் போக்குவரத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கடற்தொழிலாளர்களுடனான சிறப்பு அமர்வில் உரையாற்றிய மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சர் தர்மேந்திர பிரதான், கடற்தொழிலாளர்கள்தான் உலகப் பொருளாதாரத்தின் புகழ்பெற்ற ஹீரோக்கள். எதிர்காலத்தில் உலகின் திறன் தலைநகராக இந்தியா மாறும். அந்தளவுக்கு மத்திய அரசு தொழிற்கல்வி படிப்புகளை அறிமுகப்படுத்தி கல்வி முறையில் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது” என்றார்.

கப்பல் கட்டுதல் மற்றும் கப்பல் பழுதுபார்ப்பு குறித்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் மற்றும் ரசாயனம், உரங்கள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, “இந்தியாவில் கப்பல் கட்டுமானத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. திறன்மிக்க மனிதவளம் உள்ளிட்ட வளங்களை மேம்படுத்துவது மட்டுமின்றி, நாட்டில் கப்பல் கட்டும் சூழலை உருவாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன” என்றார்.

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மது எஸ்.நாயர், வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை, இந்தியாவில் கப்பல் கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பு வளர்ச்சியை ஊக்குவிக்கும் முயற்சிகள் குறித்து பேசினார்.

கப்பல் மறுசுழற்சி குறித்த அமர்வில், மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் உரையாற்றினார். கப்பல் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் ஷியாம் ஜெகநாதன் அமர்வுகளை நெறிப்படுத்தினார்.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள், சுற்றுலாத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக், ஆப்பிரிக்க பிரதிநிதிகளுடன் வட்டமேசை மாநாட்டை நடத்தினார்.

Tags: IndiaNirmala Sitharamanport-led development
ShareTweetSendShare
Previous Post

பங்காரு அடிகளார் காலமானார் : பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி!

Next Post

உலகக்கோப்பை: இந்தியாவுக்கு 257 ரன்கள் இலக்கு!

Related News

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

உப்பு ஏரியை உரிமம் கொண்டாடும் இந்தியா – பாகிஸ்தான் : மீண்டும் பூதாகரமாக உருவெடுத்த சர் கிரீக் பிரச்னை!

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

நஞ்சாக மாறிய இருமல் சிரப் : குழந்தைகள் பலி – விதிகளை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவு!

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

அவமதிப்பா? நாடகமா? : குகேஷின் “கிங்”ஐ தூக்கி வீசிய அமெரிக்க வீரர்!

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதற்கு கண்டனம் : கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்ற தலைமைச் செயலக ஊழியர்கள்!

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கம் போராட்டம்!

நேபாளத்தில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies