துறைமுகம் சார்ந்த வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறை: நிர்மலா சீதாராமன்!
Sep 12, 2026, 04:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துறைமுகம் சார்ந்த வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறை: நிர்மலா சீதாராமன்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 19, 2023, 07:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த 9 ஆண்டுகளில் துறைமுகம் சார்ந்த வளர்ச்சிக்காக இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

உலகளாவிய கடல்சார் உச்சி மாநாடு 2023 மும்பையில் நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு நாளான இன்று உரையாற்றிய நிர்மலா சீதாராமன், “கடந்த 9 ஆண்டுகளில் இந்திய துறைமுகங்களை மேம்படுத்த மகத்தான முயற்சிகள் எடுக்கப்பட்டது. இதன் காரணம், சரக்குக் கையாளுதல் மற்றும் சரக்கு அளவு 2 மடங்காக அதிகரித்திருக்கிறது. இந்திய துறைமுகங்களின் திருப்புமுனை நேரம் கணிசமாக மேம்பட்டு, உலகின் பல்வேறு நாடுகளை விட சிறப்பாக இருக்கிறது” என்றார்.

கப்பல் போக்குவரத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கடற்தொழிலாளர்களுடனான சிறப்பு அமர்வில் உரையாற்றிய மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சர் தர்மேந்திர பிரதான், கடற்தொழிலாளர்கள்தான் உலகப் பொருளாதாரத்தின் புகழ்பெற்ற ஹீரோக்கள். எதிர்காலத்தில் உலகின் திறன் தலைநகராக இந்தியா மாறும். அந்தளவுக்கு மத்திய அரசு தொழிற்கல்வி படிப்புகளை அறிமுகப்படுத்தி கல்வி முறையில் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது” என்றார்.

கப்பல் கட்டுதல் மற்றும் கப்பல் பழுதுபார்ப்பு குறித்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் மற்றும் ரசாயனம், உரங்கள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, “இந்தியாவில் கப்பல் கட்டுமானத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. திறன்மிக்க மனிதவளம் உள்ளிட்ட வளங்களை மேம்படுத்துவது மட்டுமின்றி, நாட்டில் கப்பல் கட்டும் சூழலை உருவாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன” என்றார்.

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மது எஸ்.நாயர், வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை, இந்தியாவில் கப்பல் கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பு வளர்ச்சியை ஊக்குவிக்கும் முயற்சிகள் குறித்து பேசினார்.

கப்பல் மறுசுழற்சி குறித்த அமர்வில், மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் உரையாற்றினார். கப்பல் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் ஷியாம் ஜெகநாதன் அமர்வுகளை நெறிப்படுத்தினார்.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள், சுற்றுலாத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக், ஆப்பிரிக்க பிரதிநிதிகளுடன் வட்டமேசை மாநாட்டை நடத்தினார்.

Tags: IndiaNirmala Sitharamanport-led development
Share
Tweet
SendShare
Previous Post

பங்காரு அடிகளார் காலமானார் : பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி!

Next Post

உலகக்கோப்பை: இந்தியாவுக்கு 257 ரன்கள் இலக்கு!

Related News

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies