உலகக்கோப்பை: இந்தியாவுக்கு 257 ரன்கள் இலக்கு!
Oct 26, 2025, 07:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை: இந்தியாவுக்கு 257 ரன்கள் இலக்கு!

Web Desk by Web Desk
Oct 19, 2023, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக் கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில், வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு 257 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை தொடரின் 17-வது ஆட்டம், புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில், இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

இதில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக தன்ஷித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர்.

இருவரும் நிதானமாக ஆடி ரன்களைக் குவிக்க தொடங்கினர். இதில் தன்ஷித் ஹசன் 43 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதை அடுத்து களமிறங்கிய வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 17 பந்துகளில் 8 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

இதன் பின் களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ் சொற்ப ரன்களில் வெளியேறினார். இதை அடுத்து தவ்ஹித் ஹிரிடோய் களமிறங்கினார். இதற்கிடையே, தொடக்கம் முதலே நிதானமாக விளையாடி வந்த லிட்டன் தாஸ் 82 பந்துகளில் 66 ரன்கள் அடித்து, இரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில், சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதன் பின் முஷ்பிகுர் ரஹீம் களமிறங்கி நிதானமாக ஆட தொடங்கினார். தவ்ஹித் ஹிரிடோய் 35 பந்துகளில் 16 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய மஹ்முதுல்லா, முஷ்பிகுர் ரஹீம் உடன் இணைந்து நிதானமாக விளையாடி, முறையே 37 பந்துகளில் 46 ரன்களும், 46 பந்துகளில் 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன் பின் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால், வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு 257 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தரப்பில் இரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஷர்துல் தாக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

Tags: icc world cup cricketindia vs bangladesh
ShareTweetSendShare
Previous Post

துறைமுகம் சார்ந்த வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறை: நிர்மலா சீதாராமன்!

Next Post

தரவு அடிப்படையிலான பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு முக்கியம் !- பியூஷ் கோயல்.

Related News

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies