உலகக்கோப்பை: இந்தியாவுக்கு 257 ரன்கள் இலக்கு!
Mar 15, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை: இந்தியாவுக்கு 257 ரன்கள் இலக்கு!

Murugesan M by Murugesan M
Oct 19, 2023, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக் கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில், வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு 257 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை தொடரின் 17-வது ஆட்டம், புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில், இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

இதில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக தன்ஷித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர்.

இருவரும் நிதானமாக ஆடி ரன்களைக் குவிக்க தொடங்கினர். இதில் தன்ஷித் ஹசன் 43 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதை அடுத்து களமிறங்கிய வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 17 பந்துகளில் 8 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

இதன் பின் களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ் சொற்ப ரன்களில் வெளியேறினார். இதை அடுத்து தவ்ஹித் ஹிரிடோய் களமிறங்கினார். இதற்கிடையே, தொடக்கம் முதலே நிதானமாக விளையாடி வந்த லிட்டன் தாஸ் 82 பந்துகளில் 66 ரன்கள் அடித்து, இரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில், சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதன் பின் முஷ்பிகுர் ரஹீம் களமிறங்கி நிதானமாக ஆட தொடங்கினார். தவ்ஹித் ஹிரிடோய் 35 பந்துகளில் 16 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய மஹ்முதுல்லா, முஷ்பிகுர் ரஹீம் உடன் இணைந்து நிதானமாக விளையாடி, முறையே 37 பந்துகளில் 46 ரன்களும், 46 பந்துகளில் 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன் பின் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால், வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு 257 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தரப்பில் இரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஷர்துல் தாக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

Tags: icc world cup cricketindia vs bangladesh
ShareTweetSendShare
Previous Post

துறைமுகம் சார்ந்த வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறை: நிர்மலா சீதாராமன்!

Next Post

தரவு அடிப்படையிலான பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு முக்கியம் !- பியூஷ் கோயல்.

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies