நாளை விண்ணில் பாய்கிறது ககன்யான் சோதனை விண்கலம்!
Mar 15, 2026, 06:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாளை விண்ணில் பாய்கிறது ககன்யான் சோதனை விண்கலம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 20, 2023, 03:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரோவின் லட்சிய மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்தின் சோதனை விண்கலம், நாளை காலை 8 மணிக்கு ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்திலிருந்து விண்ணை நோக்கி செலுத்தப்படவிருக்கிறது.

“ககன்யான்” இஸ்ரோவின் கனவுத் திட்டம் என்றே சொல்லலாம். மனிதனை விண்ணுக்கு அனுப்பி, 400 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தி, 3 நாட்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு மீண்டும் பத்திரமாக பூமிக்குக் கொண்டு வருவதுதான் இத்திட்டம். இதற்கான திட்டத்தை இஸ்ரோ கடந்த 2007-ம் ஆண்டு 10,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கியது.

இத்திட்டத்துக்கு கடந்த 2014-ல் “ககன்யான்” என்று பெயரிடப்பட்டது. இதன் பிறகு, ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. முதலில் ஆளில்லாத விண்கலத்தை விண்ணில் செலுத்தி ஆராய்ச்சி செய்து, அதன் பிறகு மனிதனை அனுப்பத் திட்டமிடப்பட்டது. இதற்காக, ஆளில்லாத ககன்யான் சோதனை விண்கலம் உருவாக்கப்பட்டது.

இந்த சோதனை வாகனமானது ஒற்றை நிலை திரவ ராக்கெட்டாகும். இதன் பேலோடுகளில் க்ரூ மாட்யூல் மற்றும் க்ரூ எஸ்கேப் சிஸ்டம்ஸ் ஆகியவை அடங்கும். இவற்றில், க்ரூ மாட்யூல் ஒரு அழுத்தமில்லாத பதிப்பாகும். இது வேகத்தை குறைத்தல் மற்றும் மீட்டெடுப்பதற்கான அனைத்து அமைப்புகளையும் கொண்டிருக்கும். இதன் முழுமையான பாராசூட்கள், மீட்பு மற்றும் செயல்படுத்தும் அமைப்புகள் மற்றும் பைரோக்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

இந்த க்ரூ மாட்யூலுடன் கூடிய க்ரூ எஸ்கேப் சிஸ்டம் சுமார் 17 கி.மீ. உயரத்தில் சோதனை வாகனத்தில் இருந்து பிரிக்கப்படும். அதன் பிறகு, சி.இ.எஸ். பிரித்து பாராசூட்டுகளின் தொடர் நிலைநிறுத்தம் தொடங்கி, ஸ்ரீஹரிகோட்டா கடற்கரையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள கடலில் பாதுகாப்பாக இறக்கப்படும். இதன் பின்னர், இந்திய கடற்படையின் பிரத்யேக கப்பல் மற்றும் டைவிங் குழு மூலம் மீட்கப்படும்.

இச்சோதனையானது ககன்யான் திட்டத்துக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும். மேலும், இந்த சோதனை விமானத்தின் வெற்றி, மீதமுள்ள தகுதிச் சோதனைகள் மற்றும் ஆளில்லா பயணங்களுக்கு உதவியாக இருக்கும். அதோடு, இந்திய விண்வெளி வீரர்களுடன் முதல் ககன்யான் பயணத்திற்கும் வழிவகுக்கும்.

இத்திட்டம் வெற்றிபெற்றால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 4-வது நாடாக இந்தியா உருவெடுக்கும். இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ISROMissiongaganyaanSaturday
ShareTweetSendShare
Previous Post

உங்களின் அசைக்க முடியாத ஆதரவு எனக்கு உண்டு என்பதில் உறுதியாக இருக்கிறேன்!

Next Post

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் : வெல்லப்போவது யார் ?

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies