நாளை விண்ணில் பாய்கிறது ககன்யான் சோதனை விண்கலம்!
Sep 12, 2026, 05:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாளை விண்ணில் பாய்கிறது ககன்யான் சோதனை விண்கலம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 20, 2023, 03:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரோவின் லட்சிய மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்தின் சோதனை விண்கலம், நாளை காலை 8 மணிக்கு ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்திலிருந்து விண்ணை நோக்கி செலுத்தப்படவிருக்கிறது.

“ககன்யான்” இஸ்ரோவின் கனவுத் திட்டம் என்றே சொல்லலாம். மனிதனை விண்ணுக்கு அனுப்பி, 400 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தி, 3 நாட்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு மீண்டும் பத்திரமாக பூமிக்குக் கொண்டு வருவதுதான் இத்திட்டம். இதற்கான திட்டத்தை இஸ்ரோ கடந்த 2007-ம் ஆண்டு 10,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கியது.

இத்திட்டத்துக்கு கடந்த 2014-ல் “ககன்யான்” என்று பெயரிடப்பட்டது. இதன் பிறகு, ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. முதலில் ஆளில்லாத விண்கலத்தை விண்ணில் செலுத்தி ஆராய்ச்சி செய்து, அதன் பிறகு மனிதனை அனுப்பத் திட்டமிடப்பட்டது. இதற்காக, ஆளில்லாத ககன்யான் சோதனை விண்கலம் உருவாக்கப்பட்டது.

இந்த சோதனை வாகனமானது ஒற்றை நிலை திரவ ராக்கெட்டாகும். இதன் பேலோடுகளில் க்ரூ மாட்யூல் மற்றும் க்ரூ எஸ்கேப் சிஸ்டம்ஸ் ஆகியவை அடங்கும். இவற்றில், க்ரூ மாட்யூல் ஒரு அழுத்தமில்லாத பதிப்பாகும். இது வேகத்தை குறைத்தல் மற்றும் மீட்டெடுப்பதற்கான அனைத்து அமைப்புகளையும் கொண்டிருக்கும். இதன் முழுமையான பாராசூட்கள், மீட்பு மற்றும் செயல்படுத்தும் அமைப்புகள் மற்றும் பைரோக்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

இந்த க்ரூ மாட்யூலுடன் கூடிய க்ரூ எஸ்கேப் சிஸ்டம் சுமார் 17 கி.மீ. உயரத்தில் சோதனை வாகனத்தில் இருந்து பிரிக்கப்படும். அதன் பிறகு, சி.இ.எஸ். பிரித்து பாராசூட்டுகளின் தொடர் நிலைநிறுத்தம் தொடங்கி, ஸ்ரீஹரிகோட்டா கடற்கரையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள கடலில் பாதுகாப்பாக இறக்கப்படும். இதன் பின்னர், இந்திய கடற்படையின் பிரத்யேக கப்பல் மற்றும் டைவிங் குழு மூலம் மீட்கப்படும்.

இச்சோதனையானது ககன்யான் திட்டத்துக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும். மேலும், இந்த சோதனை விமானத்தின் வெற்றி, மீதமுள்ள தகுதிச் சோதனைகள் மற்றும் ஆளில்லா பயணங்களுக்கு உதவியாக இருக்கும். அதோடு, இந்திய விண்வெளி வீரர்களுடன் முதல் ககன்யான் பயணத்திற்கும் வழிவகுக்கும்.

இத்திட்டம் வெற்றிபெற்றால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 4-வது நாடாக இந்தியா உருவெடுக்கும். இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ISROMissiongaganyaanSaturday
Share
Tweet
SendShare
Previous Post

உங்களின் அசைக்க முடியாத ஆதரவு எனக்கு உண்டு என்பதில் உறுதியாக இருக்கிறேன்!

Next Post

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் : வெல்லப்போவது யார் ?

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies