செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி!
Oct 28, 2025, 09:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி!

Web Desk by Web Desk
Oct 20, 2023, 03:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 14 -ம் தேதி, சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. பின்னர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போதும், புழல் சிறையில் உள்ளார்.

இந்த நிலையில், தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், அந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை சார்பில், சொலிட்டர் ஜெனரல் சுந்தரேசன் மற்றும் சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோரும், செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞரும், திமுக எம்பியுமான என்.ஆர்.இளங்கோ வாதாடினார்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இலாகா இல்லாத அமைச்சராகப் பதவி வகிப்பது, செந்தில் பாலாஜியின் சகோததர் அசோக் குமார் தலைமறைவு உள்ளிட்ட காரணங்களால் அவர் சாட்சிகளைக் களைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும், ஜாமீனில் விடுதலை செய்தால் மட்டுமே அவருக்குச் சிகிச்சை வழங்க முடியும் என்ற நிலை இல்லை. இதனால், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி தெரிவித்தார்.

இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி கௌவுல் தலைமையிலான அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின்ஜாமீன் வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கை வரும் 30 -ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Tags: chennai high courtdmk senthil balaji
ShareTweetSendShare
Previous Post

2040-க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும்: பிரதமர் மோடி!

Next Post

சென்னை புழல் சிறையில் கைதி உயிரிழப்பு – பரபரப்பு!

Related News

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

பதற வைக்கும் பகீர் தகவல்கள் : CIA-வின் கொலை சதி முறியடிப்பு உறுதிப்படுத்திய பிரதமர் மோடி?

பாகிஸ்தானிற்கு நேரடி மிரட்டல் : இந்திய முப்படைகள் நடத்தும் திரிசூல் போர் ஒத்திகை!

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

மீண்டும் ராஜதந்திரக் குழப்பத்தைத் தூண்டியுள்ள வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்!

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

தெரு நாய்க்கடி விவகாரம் : தலைமை செயலாளர்கள் ஆஜராக ஆணை – உச்சநீதிமன்றம்!

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்!

அரசியல் தலைவர்கள் நடத்தும் ரோட் ஷோ : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மும்பை : மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் ஷாவின் உடல் தகனம்!

திருவண்ணாமலை : வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் பத்திரமாக மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies