செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி!
Apr 29, 2026, 10:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி!

Murugesan M by Murugesan M
Oct 20, 2023, 03:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 14 -ம் தேதி, சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. பின்னர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போதும், புழல் சிறையில் உள்ளார்.

இந்த நிலையில், தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், அந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை சார்பில், சொலிட்டர் ஜெனரல் சுந்தரேசன் மற்றும் சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோரும், செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞரும், திமுக எம்பியுமான என்.ஆர்.இளங்கோ வாதாடினார்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இலாகா இல்லாத அமைச்சராகப் பதவி வகிப்பது, செந்தில் பாலாஜியின் சகோததர் அசோக் குமார் தலைமறைவு உள்ளிட்ட காரணங்களால் அவர் சாட்சிகளைக் களைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும், ஜாமீனில் விடுதலை செய்தால் மட்டுமே அவருக்குச் சிகிச்சை வழங்க முடியும் என்ற நிலை இல்லை. இதனால், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி தெரிவித்தார்.

இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி கௌவுல் தலைமையிலான அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின்ஜாமீன் வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கை வரும் 30 -ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Tags: chennai high courtdmk senthil balaji
ShareTweetSendShare
Previous Post

2040-க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும்: பிரதமர் மோடி!

Next Post

சென்னை புழல் சிறையில் கைதி உயிரிழப்பு – பரபரப்பு!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies