நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காணொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கும் மசோதா, 2026-ஐ நாடாளுமன்றம் நிறைவேற்றியதை வரவேற்பதாகக் கூறியுள்ளார்.
இது நம்பகமான மற்றும் வெளிப்படையான தேர்வு முறையை உருவாக்குவதற்கான முக்கியமான நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார். பல தசாப்தங்களாக அரசுகள் தேர்வு வினாத்தாள் கசிவு பிரச்சினையை எதிர்கொண்டு வருவதாகவும், மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் தேர்வு மோசடி கும்பல்களைத் தடுக்க கடுமையான சட்டங்கள் தேவைப்படுவதாகவும் கூறினார்.
இந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன்பு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
















