டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. அதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதுடன், இன்று அவசர வழக்காக விசாரிக்கவும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழக அரசு, தங்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.
















