காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் கட்டுப்பாட்டு குழு, தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க உத்தரவிட்டதை தொடர்ந்து கர்நாடகாவில் எதிர்ப்பு எழுந்த நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், காவிரி பிரச்னை தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்றும், இருமாநில விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பிரச்னைக்கு தீர்வு காண விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும், காவிரி விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் அனுப்பிய கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இரு மாநிலங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், கடும் வறட்சி நிலவுவதால் கர்நாடகத்தின் தேவைக்கு மட்டுமே போதுமான அளவில் அணைகளில் தண்ணீர் உள்ளதாகவும், அதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது எனவும் முதலமைச்சர் டி.கே.சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கிடையே தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் வேளாண் சங்கங்கள் இன்று ஒருநாள் பந்த் அறிவித்துள்ளன.
















