2040-க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும்: பிரதமர் மோடி!
Sep 12, 2026, 08:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2040-க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும்: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 20, 2023, 03:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ககன்யான் திட்டத்தின் சோதனை விண்கலம் நாளை காலை 8 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவிருக்கும் நிலையில், 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் “ககன்யான்” திட்டத்தின் முன்னேற்றம், விண்வெளி ஆய்வு முயற்சிகளின் எதிர்காலம் குறித்து பாரதப் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உயர் நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, நாளை காலை 8 மணிக்கு ஸ்ரீஹரிக் கோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ககன்யான் திட்டத்தின் சோதனை விண்கலத்தை ஏவ இஸ்ரோ திட்டமிட்டிருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, ககன்யான் திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, ககன்யான் திட்டம் பற்றிய விரிவான கண்ணோட்டம் மற்றும் திட்ட அறிக்கைகள் விண்வெளித் துறை சார்பில் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தின்போது, 2040-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் சார்பில் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “2035-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்க வேண்டும். 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு இந்தியாவின் சார்பில் மனிதனை அனுப்ப வேண்டும். இதற்கான பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் துரிதமாகச் செய்ய வேண்டும். இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும்.

அதேபோல, வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன், செவ்வாய் லேண்டர் உள்ளிட்ட கோள்களுக்கு இடையேயான பயணங்களில் நாம் பணியாற்ற வேண்டும். இந்த சாதனையை அடைய, சந்திரயான் பணிகள், அடுத்த தலைமுறை ஏவுகணை வாகனத்தின் வளர்ச்சி, புதிய ராக்கெட் ஏவுதளம் கட்டுதல், மனிதனை மையமாகக் கொண்ட ஆய்வகங்கள், அது தொடர்பான தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

விண்வெளி ஆய்வில் இந்தியா புதிய உச்சத்தை அடைய வேண்டும். அதற்கான முன்னெடுப்புப் பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட வேண்டும். அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 4-வது நாடாக இந்தியா உருவாகும். இச்சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது” என்றார்.

இக்கூட்டத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ககன்யான் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் விரிவாக எடுத்துக் கூறினார்.

Tags: ScientistPM ModiISROmeetingGaganyan
Share
Tweet
SendShare
Previous Post

ஜார்க்கண்ட் ஆளுநருக்கு பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து மழை!

Next Post

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies