"நமோ பாரத்" பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் அடையாளம்: பிரதமர் மோடி பெருமிதம்!
Mar 15, 2026, 03:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“நமோ பாரத்” பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் அடையாளம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 20, 2023, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமோ பாரத் இரயில் ஓட்டுனர் முதல் பணியாளர்கள் வரை அனைவரும் பெண்கள். இதுவே இந்தியாவில் வளர்ந்து வரும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் அடையாளமாகும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

டெல்லி-காசியாபாத்-மீரட் நமோ பாரத் எக்ஸ்பிரஸ் இரயிலை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “இது முழு நாட்டிற்கும் ஒரு வரலாற்றுத் தருணம். இன்று இந்தியாவின் முதல் அதிவிரைவு இரயில் சேவையான “நமோ பாரத்” இரயில் சேவையைத் தொடங்கியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு, நான் டெல்லி-காசியாபாத்-மீரட் பிராந்திய வழித்தட திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினேன். இன்று சாஹிபாபாத் முதல் துஹாய் டிப்போ வரையிலான பாதையில் நமோ பாரத் சேவை தொடங்கியுள்ளது.

நான் முன்பே சொன்னேன், இன்றும் சொல்கிறேன். நாங்கள் என்ன அடித்தளம் அமைத்தோமோ, அதையும் நாங்களே திறந்து வைக்கிறோம். இந்த புதிய இரயிலில் (நமோ பாரத்), ஓட்டுனர் முதல் பணியாளர்கள் வரை அனைவரும் பெண்கள். இதுவே இந்தியாவில் வளர்ந்து வரும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் அடையாளமாகும்.

இந்த அதி நவீன இரயிலில் பயணம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. எனது குழந்தைப் பருவத்தை இரயில்வே பிளாட்பாரத்தில் கழித்தேன், இன்று இந்த புதிய இரயில்வே வடிவம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இந்த அனுபவம் மகிழ்ச்சி அளிக்கிறது. நமது பாரம்பரியம் நவராத்திரியின்போது மங்களகரமான வேலைகளைச் செய்வதுதான். அந்த வகையில், இன்று இந்தியாவின் முதல் நமோ பாரத் இரயில் காத்யாயனியின் ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளது” என்றார்.

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், “இத்திட்டத்தின் வெற்றி சந்திரயான் 3 விண்கலத்துக்குச் சமம். விரைவில் மிகப்பெரிய மெட்ரோ நெட்வொர்க்கை உருவாக்குவோம்” என்றார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், “இது நவராத்திரியில் எங்களுக்குக் கிடைத்த பரிசு. கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் உங்கள் தொலைநோக்கு பார்வையில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை நாங்கள் கண்டுள்ளோம். விமான நிலையம், இரயில் நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. நமோ பாரத் புதிய இந்தியாவின் சின்னம்” என்றார்.

Tags: PM ModiNamo Bharat Train
ShareTweetSendShare
Previous Post

இருதரப்பு உறவில் சர்வதேச விதிமுறைகளை மீறவில்லை!

Next Post

2023-ம் ஆண்டு உலகப் மைக்ரோகிராஃபி புகைப்பட போட்டி!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies