"நமோ பாரத்" பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் அடையாளம்: பிரதமர் மோடி பெருமிதம்!
Aug 15, 2025, 07:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“நமோ பாரத்” பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் அடையாளம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Web Desk by Web Desk
Oct 20, 2023, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமோ பாரத் இரயில் ஓட்டுனர் முதல் பணியாளர்கள் வரை அனைவரும் பெண்கள். இதுவே இந்தியாவில் வளர்ந்து வரும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் அடையாளமாகும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

டெல்லி-காசியாபாத்-மீரட் நமோ பாரத் எக்ஸ்பிரஸ் இரயிலை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “இது முழு நாட்டிற்கும் ஒரு வரலாற்றுத் தருணம். இன்று இந்தியாவின் முதல் அதிவிரைவு இரயில் சேவையான “நமோ பாரத்” இரயில் சேவையைத் தொடங்கியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு, நான் டெல்லி-காசியாபாத்-மீரட் பிராந்திய வழித்தட திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினேன். இன்று சாஹிபாபாத் முதல் துஹாய் டிப்போ வரையிலான பாதையில் நமோ பாரத் சேவை தொடங்கியுள்ளது.

நான் முன்பே சொன்னேன், இன்றும் சொல்கிறேன். நாங்கள் என்ன அடித்தளம் அமைத்தோமோ, அதையும் நாங்களே திறந்து வைக்கிறோம். இந்த புதிய இரயிலில் (நமோ பாரத்), ஓட்டுனர் முதல் பணியாளர்கள் வரை அனைவரும் பெண்கள். இதுவே இந்தியாவில் வளர்ந்து வரும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் அடையாளமாகும்.

இந்த அதி நவீன இரயிலில் பயணம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. எனது குழந்தைப் பருவத்தை இரயில்வே பிளாட்பாரத்தில் கழித்தேன், இன்று இந்த புதிய இரயில்வே வடிவம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இந்த அனுபவம் மகிழ்ச்சி அளிக்கிறது. நமது பாரம்பரியம் நவராத்திரியின்போது மங்களகரமான வேலைகளைச் செய்வதுதான். அந்த வகையில், இன்று இந்தியாவின் முதல் நமோ பாரத் இரயில் காத்யாயனியின் ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளது” என்றார்.

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், “இத்திட்டத்தின் வெற்றி சந்திரயான் 3 விண்கலத்துக்குச் சமம். விரைவில் மிகப்பெரிய மெட்ரோ நெட்வொர்க்கை உருவாக்குவோம்” என்றார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், “இது நவராத்திரியில் எங்களுக்குக் கிடைத்த பரிசு. கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் உங்கள் தொலைநோக்கு பார்வையில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை நாங்கள் கண்டுள்ளோம். விமான நிலையம், இரயில் நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. நமோ பாரத் புதிய இந்தியாவின் சின்னம்” என்றார்.

Tags: PM ModiNamo Bharat Train
ShareTweetSendShare
Previous Post

இருதரப்பு உறவில் சர்வதேச விதிமுறைகளை மீறவில்லை!

Next Post

2023-ம் ஆண்டு உலகப் மைக்ரோகிராஃபி புகைப்பட போட்டி!

Related News

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆப்ரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் : வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்!

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை!

ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் – ஹர்பஜன் சிங்!

புதுச்சேரி : செங்கழுநீர் அம்மன் ஆலயத்தின் ஆடி மாத தேர் திருவிழா!

இந்தியாவின் குரலுக்கு உலக நாடுகள் செவிசாய்க்கின்றன : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies