தீவிரவாதம், நக்ஸலைட் தாக்குதல் குறைந்து விட்டது: காவல்துறைக்கு அமித்ஷா பாராட்டு!
Jul 25, 2025, 06:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரவாதம், நக்ஸலைட் தாக்குதல் குறைந்து விட்டது: காவல்துறைக்கு அமித்ஷா பாராட்டு!

Web Desk by Web Desk
Oct 21, 2023, 03:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவல்துறையினரின் பங்களிப்பால், கடந்த ஓராண்டில் பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் நக்சல் தாக்குதல்கள் 65 சதவீதம் குறைந்திருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

1959 அக்டோபர் 21-ம் தேதியன்று லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்கிற இடத்தில் சீனப் படையினர் பதுங்கியிருந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) 10 வீரர்களை சுட்டுக் கொன்றனர். இவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி ‘காவல்துறை நினைவு தினம்’ அனுசரிக்கப்படுகிறது.

மேலும், காவல்துறையில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக, டெல்லியில் தேசிய காவல்துறை நினைவிடம் அமைக்கப்பட்டது. இதை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2018-ம் ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நினைவிடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, “எந்த நாட்டிலும், துடிப்பான காவல்துறை இல்லாமல் எல்லைப் பாதுகாப்பும், உள்நாட்டு பாதுகாப்பும் சாத்தியமில்லை. நாட்டிலுள்ள அனைத்து அரசுத் துறைகளிலும், காவல்துறையின் கடமை மிகவும் கடினமானது என்பதை உணர்கிறேன்.  எந்த வானிலையிலும், பண்டிகை நேரத்திலும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் எப்போதும் ஒரு போலீஸ்காரர் கடமையாற்றுகிறார்.

அதேபோல, பயங்கரவாதமோ, குற்றமோ, பெரும் கூட்டமோ எதுவாக இருந்தாலும், பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்க காவல்துறை எப்போதும் உள்ளது. நம் தேசத்தின் காவல்துறை ஒவ்வொரு விஷயத்திலும் தன்னை நிரூபித்துள்ளது. காவல்துறையினரின் பங்களிப்பால், கடந்த ஓராண்டில் பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் நக்சல் தாக்குதல்கள் 65 சதவீதம் குறைந்திருக்கிறது.

இடதுசாரி தீவிரவாதம் உள்ள பகுதியாக இருந்தாலும் சரி, வடகிழக்கு மாநிலங்களாக இருந்தாலும் சரி, ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தாலும் சரி, இந்த 3 இடங்களிலும் அமைதியை நிலைநாட்டியதில் நமது ராணுவ வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை வைத்து, நாங்கள் கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளோம். அதன்படி, காவல்துறையில் தொழில்நுட்ப கட்டமைப்பை அமைப்பதன் மூலம், பயங்கரவாதத்திற்கு எதிரான சிறந்த சக்தியாக மாற்றுவது எங்கள் முயற்சியாக இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்திய அரசு 3 புதிய சட்டங்களைக் கொண்டு வருகிறது. இது நமது குற்றவியல் நீதி முறையை மாற்றும். இவை மூன்றும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவை. இப்போது, ​​இந்த சட்டங்களில் இந்தியத்தன்மை மட்டும் அல்ல, உரிமைகளும் பிரதிபலிக்கும். ஒவ்வொரு குடிமகனும் நமது அரசியலமைப்பின் உணர்வில் பாதுகாக்கப்படுவார்கள்.

வரும் நாட்களில் அமிர்த காலத்துக்கு பிரதமர் அழைப்பு விடுத்திருக்கிறார். சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 76-வது ஆண்டு முதல் நூற்றாண்டு வரை, இந்த 25 ஆண்டுகள் நாட்டை உலகின் முதல் நிலைக்கு கொண்டு செல்லும் காலம். இதற்காக, 140 கோடி மக்கள் கூட்டாக தீர்மானித்துள்ளனர்” என்றார்.

Tags: Amitshanational police memorial day
ShareTweetSendShare
Previous Post

கடலில் விழுந்த ககன்யான் விண்கலம் மீட்பு!

Next Post

உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்த விவகாரம்!

Related News

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்ட மோதல் -11 பேர் கொல்லப்பட்டனர்!

திருவள்ளூர் : பண மோசடி புகாரளித்த சின்னத்திரை நடிகை – போலீசார் விசாரணை!

குளச்சல் அருகே சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies