தீவிரவாதம், நக்ஸலைட் தாக்குதல் குறைந்து விட்டது: காவல்துறைக்கு அமித்ஷா பாராட்டு!
Apr 30, 2026, 12:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரவாதம், நக்ஸலைட் தாக்குதல் குறைந்து விட்டது: காவல்துறைக்கு அமித்ஷா பாராட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 21, 2023, 03:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவல்துறையினரின் பங்களிப்பால், கடந்த ஓராண்டில் பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் நக்சல் தாக்குதல்கள் 65 சதவீதம் குறைந்திருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

1959 அக்டோபர் 21-ம் தேதியன்று லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்கிற இடத்தில் சீனப் படையினர் பதுங்கியிருந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) 10 வீரர்களை சுட்டுக் கொன்றனர். இவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி ‘காவல்துறை நினைவு தினம்’ அனுசரிக்கப்படுகிறது.

மேலும், காவல்துறையில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக, டெல்லியில் தேசிய காவல்துறை நினைவிடம் அமைக்கப்பட்டது. இதை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2018-ம் ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நினைவிடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, “எந்த நாட்டிலும், துடிப்பான காவல்துறை இல்லாமல் எல்லைப் பாதுகாப்பும், உள்நாட்டு பாதுகாப்பும் சாத்தியமில்லை. நாட்டிலுள்ள அனைத்து அரசுத் துறைகளிலும், காவல்துறையின் கடமை மிகவும் கடினமானது என்பதை உணர்கிறேன்.  எந்த வானிலையிலும், பண்டிகை நேரத்திலும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் எப்போதும் ஒரு போலீஸ்காரர் கடமையாற்றுகிறார்.

அதேபோல, பயங்கரவாதமோ, குற்றமோ, பெரும் கூட்டமோ எதுவாக இருந்தாலும், பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்க காவல்துறை எப்போதும் உள்ளது. நம் தேசத்தின் காவல்துறை ஒவ்வொரு விஷயத்திலும் தன்னை நிரூபித்துள்ளது. காவல்துறையினரின் பங்களிப்பால், கடந்த ஓராண்டில் பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் நக்சல் தாக்குதல்கள் 65 சதவீதம் குறைந்திருக்கிறது.

இடதுசாரி தீவிரவாதம் உள்ள பகுதியாக இருந்தாலும் சரி, வடகிழக்கு மாநிலங்களாக இருந்தாலும் சரி, ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தாலும் சரி, இந்த 3 இடங்களிலும் அமைதியை நிலைநாட்டியதில் நமது ராணுவ வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை வைத்து, நாங்கள் கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளோம். அதன்படி, காவல்துறையில் தொழில்நுட்ப கட்டமைப்பை அமைப்பதன் மூலம், பயங்கரவாதத்திற்கு எதிரான சிறந்த சக்தியாக மாற்றுவது எங்கள் முயற்சியாக இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்திய அரசு 3 புதிய சட்டங்களைக் கொண்டு வருகிறது. இது நமது குற்றவியல் நீதி முறையை மாற்றும். இவை மூன்றும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவை. இப்போது, ​​இந்த சட்டங்களில் இந்தியத்தன்மை மட்டும் அல்ல, உரிமைகளும் பிரதிபலிக்கும். ஒவ்வொரு குடிமகனும் நமது அரசியலமைப்பின் உணர்வில் பாதுகாக்கப்படுவார்கள்.

வரும் நாட்களில் அமிர்த காலத்துக்கு பிரதமர் அழைப்பு விடுத்திருக்கிறார். சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 76-வது ஆண்டு முதல் நூற்றாண்டு வரை, இந்த 25 ஆண்டுகள் நாட்டை உலகின் முதல் நிலைக்கு கொண்டு செல்லும் காலம். இதற்காக, 140 கோடி மக்கள் கூட்டாக தீர்மானித்துள்ளனர்” என்றார்.

Tags: Amitshanational police memorial day
ShareTweetSendShare
Previous Post

கடலில் விழுந்த ககன்யான் விண்கலம் மீட்பு!

Next Post

உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்த விவகாரம்!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies