தீவிரவாதம், நக்ஸலைட் தாக்குதல் குறைந்து விட்டது: காவல்துறைக்கு அமித்ஷா பாராட்டு!
Jul 29, 2026, 11:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரவாதம், நக்ஸலைட் தாக்குதல் குறைந்து விட்டது: காவல்துறைக்கு அமித்ஷா பாராட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 21, 2023, 03:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவல்துறையினரின் பங்களிப்பால், கடந்த ஓராண்டில் பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் நக்சல் தாக்குதல்கள் 65 சதவீதம் குறைந்திருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

1959 அக்டோபர் 21-ம் தேதியன்று லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்கிற இடத்தில் சீனப் படையினர் பதுங்கியிருந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) 10 வீரர்களை சுட்டுக் கொன்றனர். இவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி ‘காவல்துறை நினைவு தினம்’ அனுசரிக்கப்படுகிறது.

மேலும், காவல்துறையில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக, டெல்லியில் தேசிய காவல்துறை நினைவிடம் அமைக்கப்பட்டது. இதை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2018-ம் ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நினைவிடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, “எந்த நாட்டிலும், துடிப்பான காவல்துறை இல்லாமல் எல்லைப் பாதுகாப்பும், உள்நாட்டு பாதுகாப்பும் சாத்தியமில்லை. நாட்டிலுள்ள அனைத்து அரசுத் துறைகளிலும், காவல்துறையின் கடமை மிகவும் கடினமானது என்பதை உணர்கிறேன்.  எந்த வானிலையிலும், பண்டிகை நேரத்திலும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் எப்போதும் ஒரு போலீஸ்காரர் கடமையாற்றுகிறார்.

அதேபோல, பயங்கரவாதமோ, குற்றமோ, பெரும் கூட்டமோ எதுவாக இருந்தாலும், பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்க காவல்துறை எப்போதும் உள்ளது. நம் தேசத்தின் காவல்துறை ஒவ்வொரு விஷயத்திலும் தன்னை நிரூபித்துள்ளது. காவல்துறையினரின் பங்களிப்பால், கடந்த ஓராண்டில் பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் நக்சல் தாக்குதல்கள் 65 சதவீதம் குறைந்திருக்கிறது.

இடதுசாரி தீவிரவாதம் உள்ள பகுதியாக இருந்தாலும் சரி, வடகிழக்கு மாநிலங்களாக இருந்தாலும் சரி, ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தாலும் சரி, இந்த 3 இடங்களிலும் அமைதியை நிலைநாட்டியதில் நமது ராணுவ வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை வைத்து, நாங்கள் கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளோம். அதன்படி, காவல்துறையில் தொழில்நுட்ப கட்டமைப்பை அமைப்பதன் மூலம், பயங்கரவாதத்திற்கு எதிரான சிறந்த சக்தியாக மாற்றுவது எங்கள் முயற்சியாக இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்திய அரசு 3 புதிய சட்டங்களைக் கொண்டு வருகிறது. இது நமது குற்றவியல் நீதி முறையை மாற்றும். இவை மூன்றும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவை. இப்போது, ​​இந்த சட்டங்களில் இந்தியத்தன்மை மட்டும் அல்ல, உரிமைகளும் பிரதிபலிக்கும். ஒவ்வொரு குடிமகனும் நமது அரசியலமைப்பின் உணர்வில் பாதுகாக்கப்படுவார்கள்.

வரும் நாட்களில் அமிர்த காலத்துக்கு பிரதமர் அழைப்பு விடுத்திருக்கிறார். சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 76-வது ஆண்டு முதல் நூற்றாண்டு வரை, இந்த 25 ஆண்டுகள் நாட்டை உலகின் முதல் நிலைக்கு கொண்டு செல்லும் காலம். இதற்காக, 140 கோடி மக்கள் கூட்டாக தீர்மானித்துள்ளனர்” என்றார்.

Tags: Amitshanational police memorial day
ShareTweetSendShare
Previous Post

கடலில் விழுந்த ககன்யான் விண்கலம் மீட்பு!

Next Post

உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்த விவகாரம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies