கரூர் மாவட்டத்தில் உள்ள மணல் குவாரிகளில் 25-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர்.
சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர், சென்னை புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு மணல் குவாரி அதிபர்கள் சிலரிடம் தொடர்பு உள்ளதாக எழுந்த புகாரின் பேரில், மணல் குவாரி மற்றும் அது தொடர்புடைய பிரபலங்களான ராமச்சந்திரன், கரிகாலன், ரத்தினம், திண்டுக்கல் திமுக கவுன்சிலர் வெங்கேடஷ், சென்னை கனிமவள அலுவலகம் உள்ளிட்டவற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
ஏற்கனவே, கரூர், அரியலூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர்.
அப்போது, டிரேன், டிஜிட்டல் மணல் அளக்கும் மீட்டர்கள் துணையுடன் குவாரிகளில் அள்ளப்பட்ட மணலின் அளவு எவ்வளவு என துல்லியமாக்கக் கணக்கிட்டு வருகின்றனர். இதனால், செந்தில் பாலாஜிக்கு மேலும் சிக்கல் வலுத்துள்ளது.
இதனிடையே, அக்டோபர் 21-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்குப் பிறந்த நாள் ஆகும். ஆனால், அதற்கு முதல் நாளே அமலாக்கத்துறையினர் கரூர் குவாரிகளில் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.