கிடைத்தது இடைக்கால ஜாமீன்: நாடு திரும்பினார் நவாஸ் ஷெரீப்!
Mar 15, 2026, 09:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிடைத்தது இடைக்கால ஜாமீன்: நாடு திரும்பினார் நவாஸ் ஷெரீப்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 21, 2023, 06:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இடைக்கால ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், 4 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பி இருக்கிறார். பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், நவாஸ் ஷெரீப் நாடு திரும்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் நிறுவனத் தலைவரா நவாஸ் ஷெரீப், 3 முறை அந்நாட்டின் பிரதமராக இருந்தார். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. இந்த சூழலில், கடந்த 2017-ம் ஆண்டு பனாமா ஆவண முறைகேடு தொடர்பாக, நவாஸ் ஷெரீப் பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர், ஊழல் வழக்கில் நவாஸுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்காக 4 வார ஜாமீன் கேட்டார்.

ஜாமீன் கிடைத்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்குச் சென்றார். அதன்பிறகு, நவாஸ் பாகிஸ்தானுக்கு திரும்பவே இல்லை. தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில், பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது.

இதன் பிறகு, நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராகப் பதவியேற்றார். அதேசமயம், முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தோஷாகான எனப்படும் அரசு பரிசுப் பொருட்களை விற்று பண மோசடி செய்த வழக்கில் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இதனிடையே, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பதவி காலம் முடிவடையவிருந்த நிலையில், ஷெபாஸ் ஷெரீப் முன்கூட்டியே நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டார். எனவே, அங்கு விரைவில் பொதுத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இம்ரான் கான் சிறையில் இருப்பதால், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என்று நவாஸ் ஷெரீப் கருதுகிறார்.

அதேசமயம், அவர் பாகிஸ்தான் திரும்பினால் கைது செய்யப்படும் அபாயம் உள்ளது. எனவே, நவாஸ் ஷெரீப் தேர்தலில் பிரசாரம் செய்ய ஏதுவாக, அவருக்கு இடைக்கால ஜாமீன் கோரி அவரது சார்பில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து, நவாஸ் ஷெரீப் தனது குடும்பத்தினருடன் பிரிட்டனில் இருந்து துபாய் வந்து, அங்கிருந்து உமீத் இ பாகிஸ்தான் என்கிற சார்டர்டு விமானத்தில் இஸ்லாமாபாத் வந்து இறங்கினார். அவரை, விமான நிலையத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். நாடு திரும்பிய நவாஸ், பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

நவாஸ் வருகையை ஒட்டி, 7,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags: pakistannawaz sharifreturnsafter 4 year
ShareTweetSendShare
Previous Post

ஏபிவிபி பெண் ஊழியரை அறையில் அடைத்து வைத்த எஸ்எப்ஐ இயக்கத்தினர்!

Next Post

துர்கா பூஜையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies