கிடைத்தது இடைக்கால ஜாமீன்: நாடு திரும்பினார் நவாஸ் ஷெரீப்!
Jul 29, 2026, 01:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிடைத்தது இடைக்கால ஜாமீன்: நாடு திரும்பினார் நவாஸ் ஷெரீப்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 21, 2023, 06:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இடைக்கால ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், 4 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பி இருக்கிறார். பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், நவாஸ் ஷெரீப் நாடு திரும்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் நிறுவனத் தலைவரா நவாஸ் ஷெரீப், 3 முறை அந்நாட்டின் பிரதமராக இருந்தார். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. இந்த சூழலில், கடந்த 2017-ம் ஆண்டு பனாமா ஆவண முறைகேடு தொடர்பாக, நவாஸ் ஷெரீப் பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர், ஊழல் வழக்கில் நவாஸுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்காக 4 வார ஜாமீன் கேட்டார்.

ஜாமீன் கிடைத்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்குச் சென்றார். அதன்பிறகு, நவாஸ் பாகிஸ்தானுக்கு திரும்பவே இல்லை. தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில், பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது.

இதன் பிறகு, நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராகப் பதவியேற்றார். அதேசமயம், முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தோஷாகான எனப்படும் அரசு பரிசுப் பொருட்களை விற்று பண மோசடி செய்த வழக்கில் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இதனிடையே, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பதவி காலம் முடிவடையவிருந்த நிலையில், ஷெபாஸ் ஷெரீப் முன்கூட்டியே நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டார். எனவே, அங்கு விரைவில் பொதுத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இம்ரான் கான் சிறையில் இருப்பதால், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என்று நவாஸ் ஷெரீப் கருதுகிறார்.

அதேசமயம், அவர் பாகிஸ்தான் திரும்பினால் கைது செய்யப்படும் அபாயம் உள்ளது. எனவே, நவாஸ் ஷெரீப் தேர்தலில் பிரசாரம் செய்ய ஏதுவாக, அவருக்கு இடைக்கால ஜாமீன் கோரி அவரது சார்பில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து, நவாஸ் ஷெரீப் தனது குடும்பத்தினருடன் பிரிட்டனில் இருந்து துபாய் வந்து, அங்கிருந்து உமீத் இ பாகிஸ்தான் என்கிற சார்டர்டு விமானத்தில் இஸ்லாமாபாத் வந்து இறங்கினார். அவரை, விமான நிலையத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். நாடு திரும்பிய நவாஸ், பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

நவாஸ் வருகையை ஒட்டி, 7,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags: pakistannawaz sharifreturnsafter 4 year
ShareTweetSendShare
Previous Post

ஏபிவிபி பெண் ஊழியரை அறையில் அடைத்து வைத்த எஸ்எப்ஐ இயக்கத்தினர்!

Next Post

துர்கா பூஜையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies