எல்லையில் சீனாவின் கட்டமைப்புகள்: எச்சரிக்கும் பென்டகன்!
Jul 26, 2025, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எல்லையில் சீனாவின் கட்டமைப்புகள்: எச்சரிக்கும் பென்டகன்!

Web Desk by Web Desk
Oct 22, 2023, 04:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில், எப்போதும் இல்லாத வகையில் எல்லைப் பகுதியில் சீனா தனது இராணுவ பலத்தையும், சாலைகள், விமான நிலையம், ஹெலிபேடுகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளையும் அதிகரித்து வருவதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்திருக்கிறது.

இந்தியா – சீனா இடையே எல்லைக் கட்டுபாட்டுக் கோடு தொடர்பான பிரச்சனை தொடர்ந்து வருகிறது. அவ்வப்போது இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவுவதும், இந்தியா எதிர்ப்புத் தெரிவித்ததும் பின்வாங்குவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இதுபோன்ற ஊடுருவல் சம்பவத்தின்போது, இருநாட்டு இராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, இரு தரப்பிலும் உயிர்ப்பலி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன் பிறகு, எல்லை அருகே இந்தியா பாதுகாப்பை அதிகரித்திருக்கிறது. அதேபோல, சீனாவும் கட்டமைப்புகளை அதிகரித்து வருகிறது. எனினும், கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இந்தியாவும் சீனாவும் 20 முறை பேச்சுவார்த்தைகளை நடத்தின. சமீபத்தில், கடந்த 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெற்ற 20-வது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது எல்லைகளில் இருக்கும் படைகளை கணிசமாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு இரு தரப்பும் வந்தன.

அதேபோல், எல்லைகளில் இருந்த படைகளை கணிசமாக விலக்கியும் இருந்தன. இந்த சூழலில்தான், டோக்லாம், பாங்காங் லேக் போன்ற எல்லைப் பகுதியில் சாலைகள் அமைத்தல், இரு பயன்பாட்டுக்கான விமான நிலையம் அமைத்தல், பல்வேறு ஹெலிபேடுகள் அமைத்தல் போன்ற செயல்களில் சீனா ஈடுபட்டு வந்ததாக பென்டகன் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து பென்டகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “2020-ம் ஆண்டு மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து, இந்தியா – சீனா எல்லையில் நீடித்த பதற்றங்கள் சீனாவின் வெஸ்டர்ன் தியேட்டர் கமாண்டின் கவனத்தைப் பெற்றன. தொடர்ந்து, எல்லை வரையறை குறித்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள மாறுபட்ட நிலைப்பாடுகள், பல மோதல்களுக்கும், எல்லையில் படைகளை நிறுத்துவதற்கும் வழிவகுத்திருக்கிறது.

20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்த கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பதிலளிக்கும் விதமாக, சீனாவின் வெஸ்டர்ன் கமாண்ட் எல்லையில் பெரிய அளவிலான போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. சீனாவிடம் 500-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருக்கின்றன. 2030-க்குள் இந்த எண்ணிக்கை 1,000-க்கும் மேல் உயரும். ஏற்கெனவே, உலகிலேயே மிகப் பெரிய கடற்படையைக் கொண்டிருக்கும் சீனா, கடற்படையை மேலும் வலுப்படுத்தி வருகிறது.

மேலும், 2022-ம் ஆண்டில் சீனா எல்லையில் இராணுவ உள்கட்டமைப்பைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. டோக்லாம் அருகே நிலத்தடி சேமிப்பு குடோன்கள், புதிய சாலைகள் மற்றும் அண்டை நாடான பூடானில் புதிய கிராமங்கள், பாங்காங் ஏரியின் மீது 2-வது பாலம், இரட்டை பயன்பாட்டுக்குரிய விமான நிலையங்கள் மற்றும் பல ஹெலிபேடுகள் ஆகியவற்றை சீனா உருவாக்கி இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: WeaponschinaBorder
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸ் தீவிரவாதிகள் ரத்தவெறி பிடித்தவர்கள்: தீவிரவாதியின் மகன் பகிரங்க பேட்டி!

Next Post

பாலஸ்தீன மக்களுக்கு 40 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பிய இந்தியா!

Related News

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

Load More

அண்மைச் செய்திகள்

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies