எல்லையில் சீனாவின் கட்டமைப்புகள்: எச்சரிக்கும் பென்டகன்!
Jan 14, 2026, 09:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எல்லையில் சீனாவின் கட்டமைப்புகள்: எச்சரிக்கும் பென்டகன்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 22, 2023, 04:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில், எப்போதும் இல்லாத வகையில் எல்லைப் பகுதியில் சீனா தனது இராணுவ பலத்தையும், சாலைகள், விமான நிலையம், ஹெலிபேடுகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளையும் அதிகரித்து வருவதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்திருக்கிறது.

இந்தியா – சீனா இடையே எல்லைக் கட்டுபாட்டுக் கோடு தொடர்பான பிரச்சனை தொடர்ந்து வருகிறது. அவ்வப்போது இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவுவதும், இந்தியா எதிர்ப்புத் தெரிவித்ததும் பின்வாங்குவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இதுபோன்ற ஊடுருவல் சம்பவத்தின்போது, இருநாட்டு இராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, இரு தரப்பிலும் உயிர்ப்பலி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன் பிறகு, எல்லை அருகே இந்தியா பாதுகாப்பை அதிகரித்திருக்கிறது. அதேபோல, சீனாவும் கட்டமைப்புகளை அதிகரித்து வருகிறது. எனினும், கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இந்தியாவும் சீனாவும் 20 முறை பேச்சுவார்த்தைகளை நடத்தின. சமீபத்தில், கடந்த 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெற்ற 20-வது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது எல்லைகளில் இருக்கும் படைகளை கணிசமாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு இரு தரப்பும் வந்தன.

அதேபோல், எல்லைகளில் இருந்த படைகளை கணிசமாக விலக்கியும் இருந்தன. இந்த சூழலில்தான், டோக்லாம், பாங்காங் லேக் போன்ற எல்லைப் பகுதியில் சாலைகள் அமைத்தல், இரு பயன்பாட்டுக்கான விமான நிலையம் அமைத்தல், பல்வேறு ஹெலிபேடுகள் அமைத்தல் போன்ற செயல்களில் சீனா ஈடுபட்டு வந்ததாக பென்டகன் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து பென்டகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “2020-ம் ஆண்டு மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து, இந்தியா – சீனா எல்லையில் நீடித்த பதற்றங்கள் சீனாவின் வெஸ்டர்ன் தியேட்டர் கமாண்டின் கவனத்தைப் பெற்றன. தொடர்ந்து, எல்லை வரையறை குறித்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள மாறுபட்ட நிலைப்பாடுகள், பல மோதல்களுக்கும், எல்லையில் படைகளை நிறுத்துவதற்கும் வழிவகுத்திருக்கிறது.

20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்த கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பதிலளிக்கும் விதமாக, சீனாவின் வெஸ்டர்ன் கமாண்ட் எல்லையில் பெரிய அளவிலான போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. சீனாவிடம் 500-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருக்கின்றன. 2030-க்குள் இந்த எண்ணிக்கை 1,000-க்கும் மேல் உயரும். ஏற்கெனவே, உலகிலேயே மிகப் பெரிய கடற்படையைக் கொண்டிருக்கும் சீனா, கடற்படையை மேலும் வலுப்படுத்தி வருகிறது.

மேலும், 2022-ம் ஆண்டில் சீனா எல்லையில் இராணுவ உள்கட்டமைப்பைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. டோக்லாம் அருகே நிலத்தடி சேமிப்பு குடோன்கள், புதிய சாலைகள் மற்றும் அண்டை நாடான பூடானில் புதிய கிராமங்கள், பாங்காங் ஏரியின் மீது 2-வது பாலம், இரட்டை பயன்பாட்டுக்குரிய விமான நிலையங்கள் மற்றும் பல ஹெலிபேடுகள் ஆகியவற்றை சீனா உருவாக்கி இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: chinaBorderWeapons
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸ் தீவிரவாதிகள் ரத்தவெறி பிடித்தவர்கள்: தீவிரவாதியின் மகன் பகிரங்க பேட்டி!

Next Post

பாலஸ்தீன மக்களுக்கு 40 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பிய இந்தியா!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies