பாலஸ்தீன மக்களுக்கு 40 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பிய இந்தியா!
Sep 12, 2026, 12:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாலஸ்தீன மக்களுக்கு 40 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பிய இந்தியா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 22, 2023, 04:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு, இந்தியா சார்பில் 40 டன் மருத்துவப் பொருட்கள் மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி தெரிவித்திருக்கிறார்.

பாலஸ்தீன நாட்டின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி கொடூரமான தாக்குதலை அரங்கேற்றினர். காலை நேரத்தில் இஸ்ரேல் இராணுவம் அசந்திருந்த சமயத்தில் ஒரே நேரத்தில் 7,000 ஏவுகணைகளை செலுத்தி திணறடித்தனர்.

மேலும், நேரடியாகவும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி, கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுக் கொலை செய்தனர்.  இத்தாக்குதலில் 1,400-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், 200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை பிணைக் கைதியாகவும் பிடித்துச் சென்றனர்.

இதன் பிறகு சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல், காஸா மீது கடுமையான எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது. முதலில் விமானப்படை மூலம் வான்வழித் தாக்குதலில் மட்டுமே ஈடுபட்டு வந்த இஸ்ரேல் இராணுவம், கடந்த 6 நாட்களாக தரைவழித் தாக்குதலிலும் ஈடுபட்டிருக்கிறது. எல்லையில் அணிவகுத்து நிற்கும் பீரங்கிகளும், டாங்கிகளும் காஸா மீது குண்டு மழை பொழிந்து வருகின்றன.

மேலும், காஸா நகருக்குள் ஊடுருவி நேரடித் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேல் நடத்திய இத்தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 4,385 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும், 10,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

அதேசமயம், இஸ்ரேல் இராணுவம் 16-வது நாளாக தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால், காஸாவில் பலி எண்ணிக்கையும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, காஸா நகர மக்கள் குடிக்க தண்ணீர் உட்பட மின்சாரம், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட எவ்வித அத்தியாவசிப் பொருட்களும் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர். அதேபோல, சிகிச்சைக்கு மருந்துப் பொருட்களும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான், போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்கள் அடங்கிய மனிதாபிமான உதவிகளை இந்தியா அனுப்பி இருப்பதாக வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதவில், “பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா மனிதாபிமான உதவியை அனுப்புகிறது! பாலஸ்தீன மக்களுக்கான IAF C-17 விமானம் சுமார் 6.5 டன் மருத்துவ உதவி மற்றும் 32 டன் பேரிடர் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு எகிப்து நாட்டின் எல்-அரிஷ் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டது.

அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சைப் பொருட்கள், கூடாரங்கள், தூங்கும் பைகள், தார்ப்பாய்கள், சானிட்டரி பயன்பாடுகள், தண்ணீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் போன்ற பிற தேவையான பொருட்களும் இதில் அடங்கும். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே நிலவும் மோதல்களுக்கு மத்தியில் இந்தியா மனிதாபிமான உதவிகளை அனுப்பி இருக்கிறது” என்று தெரிவநித்திருக்கிறார்.

Tags: IndiaPalestineSendsMedical Aid
Share
Tweet
SendShare
Previous Post

எல்லையில் சீனாவின் கட்டமைப்புகள்: எச்சரிக்கும் பென்டகன்!

Next Post

அனைத்து மதத்தையும் மதிக்கும் இந்து மதம்: இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து மோகன் பகவத் கருத்து!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies