அனைத்து மதத்தையும் மதிக்கும் இந்து மதம்: இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து மோகன் பகவத் கருத்து!
Sep 11, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைத்து மதத்தையும் மதிக்கும் இந்து மதம்: இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து மோகன் பகவத் கருத்து!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 22, 2023, 04:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹிந்து மதமும், அதன் கலாச்சாரமும், அனைத்து மதங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் மரியாதை அளித்து வருகிறது. இதனால்தான், இஸ்ரேல்-ஹமாஸ் போர் போன்ற பிரச்சனைகளில் இந்தியாவில் போர் ஏற்பட்டதில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஒரு பள்ளியில், மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 350-வது முடிசூட்டு விழா தொடர்பான நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசுகையில், “மற்ற எல்லா இடங்களிலும் ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. உக்ரைன்-ரஷ்யா, இஸ்ரேல்-ஹமாஸ் போர் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

நம் நாட்டில் இதுபோன்ற பிரச்சனைகளில் ஒருபோதும் போர் நடந்ததில்லை. இதுபோன்ற சண்டைகள் எங்களுக்கு இருந்ததில்லை. இதுபோன்ற பிரச்சனைகளில் நாங்கள் யாருடனும் சண்டையிட மாட்டோம். ஏனெனில், எல்லா மதங்களையும், பிரிவினரையும் மதிக்கும் கலாச்சாரம் எங்களிடம் உள்ளது. அதுதான் இந்து மதம்.

இந்தியாவை பொறுத்தவரை இந்து மதம், கலாசாரம் ஆகியவை அனைத்து மதங்களுக்கும், நம்பிக்கைக்கும் மரியாதை அளிக்கிறது. இது இந்துக்களின் நாடு. அதற்காக மற்ற மதத்தினர் புறந்தள்ளப்படுகிறார்கள் என்று அர்த்தம் அல்ல. ஒருமுறை நீங்கள் இந்து என்று சொன்னவுடன், முஸ்லீம்கள் பாதுகாக்கப்பட்டார்கள் என்று கூற வேண்டிய அவசியம் இல்லை.

இந்துக்கள் மட்டும் இதை செய்கிறார்கள். இந்தியா மட்டுமே இதைச் செய்கிறது. மற்றவர்கள் இதை செய்யவில்லை. மன்னர் சிவாஜி காலத்தில் நடந்த படையெடுப்பு இந்த வகையில்தான். ஆனால், இந்த பிரச்சனையில் நாங்கள் யாருடனும் சண்டை போட்டதில்லை. அதனால்தான் நாங்கள் இந்துக்கள்” என்றார்.

கடந்த 7-ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது கொடூரமான தீவிரவாதத் தாக்குதலை நடத்தினர். இதில், 1,400-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கு பதிலடியாக, காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாத முகாம்கள் மீது இஸ்ரேல் எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் 4,385 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்தப் போர் 16-வது நாளாக இன்றும் நடந்து வருகிறது. இந்த நிலையில்தான், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்து வரும் போர் போன்ற பிரச்சனைகளில் இந்தியா ஒருபோதும் போரைக் கண்டதில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருக்கிறார்.

Tags: RSS Chiefmohan bhagwatisrael hamas war
Share
Tweet
SendShare
Previous Post

பாலஸ்தீன மக்களுக்கு 40 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பிய இந்தியா!

Next Post

இந்திய அணியின் புதிய நடைமுறை !

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies