இந்திய அணியின் புதிய நடைமுறை !
Aug 6, 2026, 08:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய அணியின் புதிய நடைமுறை !

இந்திய அணிக்குள் ஒரு புதிய வழிமுறையை வகுத்த ரோஹித் சர்மா - இரசிகர்கள் பாராட்டு.

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 22, 2023, 04:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா இந்திய அணியை ஒற்றுமையாக்கவும், வீர்ரகளுக்கிடையே புரிதலை ஏற்படுத்தவும் ஒரு புது முயற்சி செய்துள்ளார்.

ஒவ்வொரு உலகக்கோப்பைப் போட்டிக்கும் முன் இந்திய வீரர்கள் வட்டமாக நின்று உற்சாகப்படுத்திக் கொள்வார்கள். பொதுவாக இதுப் போன்ற நேரத்தில் அணியின் கேப்டன், தன் வீரர்களை ஊக்கப்படுத்தி பேசுவார் அல்லது அணியின் பயிற்சியாளர், பிற மூத்த வீரர்கள் பேசுவார்கள். ஆனால், ரோஹித் சர்மா இதில் புதுமையை புகுத்தி இருக்கிறார். அதாவது ஒவ்வொருப் போட்டியிலும் ஒவ்வொரு வீரர் ஊக்கம் அளித்து பேச வேண்டும் என்ற ஒரு புதிய வழிமுறையை வகுத்துள்ளார்.

அது மூத்த வீரரோ, இளம் வீரரோ யாராக இருந்தாலும் ஒவ்வொருப் போட்டியிலும் ஒருவர் பேசியே ஆக வேண்டும். இதன் மூலம் இந்திய அணி வீரர்கள் தங்களுக்குள் நல்ல புரிதலை வளர்த்துக் கொள்ள முடியும் என ரோஹித் சர்மா நம்புகிறார். அதுப் போட்டிகளிலும் பிரதிபலிக்கிறது.

இந்தியா – நியூசிலாந்து போட்டிக்கு முன் இளம் வீரர் சுப்மன் கில் ஊக்கம் அளித்து பேசினார். இந்திய அணியில் அனைவருமே அவரை விட மூத்த வீரர்கள் தான். ரோஹித், கோலி, ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா, ஷமி, ஜடேஜா என பல மூத்த வீரர்கள் இருந்த போதும் அவரை பேசுமாறு கூறினார் ரோஹித் சர்மா.

அதேப் போல, இந்த உலகக்கோப்பைத் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு வீரர்கள் பேசி உள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் ஜடேஜா பேசினார். ஆப்கானிஸ்தான் போட்டிக்கு முன் விராட் கோலி, பாகிஸ்தான் போட்டிக்கு முன் பும்ரா, வங்கதேச அணிக்கு எதிரான போட்டிக்கு முன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசினார்கள்.

அவர்களைத் தொடர்ந்து தற்போது சுப்மன் கில் பேசி இருக்கிறார். இனி அடுத்து இந்தியா ஆடும் போட்டிகளுக்கு முன் வேறு வீரர்கள் பேசுவார்கள். ரோஹித் சர்மாவின் இந்த திட்டம் அணியில் ஒற்றுமையையும், புரிதலையும் வளர்க்கும் எனவும் ரோஹித் சர்மா தான் ஒரு நல்ல கேப்டன் என்பதை இதன் மூலம் நிரூபித்து இருக்கிறார் எனவும் இரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags: world Cup Cricketindian cricket team
Share
Tweet
SendShare
Previous Post

அனைத்து மதத்தையும் மதிக்கும் இந்து மதம்: இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து மோகன் பகவத் கருத்து!

Next Post

காசா மீது தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டம் !

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies