இந்திய அணியின் புதிய நடைமுறை !
Jan 14, 2026, 06:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய அணியின் புதிய நடைமுறை !

இந்திய அணிக்குள் ஒரு புதிய வழிமுறையை வகுத்த ரோஹித் சர்மா - இரசிகர்கள் பாராட்டு.

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 22, 2023, 04:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா இந்திய அணியை ஒற்றுமையாக்கவும், வீர்ரகளுக்கிடையே புரிதலை ஏற்படுத்தவும் ஒரு புது முயற்சி செய்துள்ளார்.

ஒவ்வொரு உலகக்கோப்பைப் போட்டிக்கும் முன் இந்திய வீரர்கள் வட்டமாக நின்று உற்சாகப்படுத்திக் கொள்வார்கள். பொதுவாக இதுப் போன்ற நேரத்தில் அணியின் கேப்டன், தன் வீரர்களை ஊக்கப்படுத்தி பேசுவார் அல்லது அணியின் பயிற்சியாளர், பிற மூத்த வீரர்கள் பேசுவார்கள். ஆனால், ரோஹித் சர்மா இதில் புதுமையை புகுத்தி இருக்கிறார். அதாவது ஒவ்வொருப் போட்டியிலும் ஒவ்வொரு வீரர் ஊக்கம் அளித்து பேச வேண்டும் என்ற ஒரு புதிய வழிமுறையை வகுத்துள்ளார்.

அது மூத்த வீரரோ, இளம் வீரரோ யாராக இருந்தாலும் ஒவ்வொருப் போட்டியிலும் ஒருவர் பேசியே ஆக வேண்டும். இதன் மூலம் இந்திய அணி வீரர்கள் தங்களுக்குள் நல்ல புரிதலை வளர்த்துக் கொள்ள முடியும் என ரோஹித் சர்மா நம்புகிறார். அதுப் போட்டிகளிலும் பிரதிபலிக்கிறது.

இந்தியா – நியூசிலாந்து போட்டிக்கு முன் இளம் வீரர் சுப்மன் கில் ஊக்கம் அளித்து பேசினார். இந்திய அணியில் அனைவருமே அவரை விட மூத்த வீரர்கள் தான். ரோஹித், கோலி, ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா, ஷமி, ஜடேஜா என பல மூத்த வீரர்கள் இருந்த போதும் அவரை பேசுமாறு கூறினார் ரோஹித் சர்மா.

அதேப் போல, இந்த உலகக்கோப்பைத் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு வீரர்கள் பேசி உள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் ஜடேஜா பேசினார். ஆப்கானிஸ்தான் போட்டிக்கு முன் விராட் கோலி, பாகிஸ்தான் போட்டிக்கு முன் பும்ரா, வங்கதேச அணிக்கு எதிரான போட்டிக்கு முன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசினார்கள்.

அவர்களைத் தொடர்ந்து தற்போது சுப்மன் கில் பேசி இருக்கிறார். இனி அடுத்து இந்தியா ஆடும் போட்டிகளுக்கு முன் வேறு வீரர்கள் பேசுவார்கள். ரோஹித் சர்மாவின் இந்த திட்டம் அணியில் ஒற்றுமையையும், புரிதலையும் வளர்க்கும் எனவும் ரோஹித் சர்மா தான் ஒரு நல்ல கேப்டன் என்பதை இதன் மூலம் நிரூபித்து இருக்கிறார் எனவும் இரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags: indian cricket teamworld Cup Cricket
ShareTweetSendShare
Previous Post

அனைத்து மதத்தையும் மதிக்கும் இந்து மதம்: இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து மோகன் பகவத் கருத்து!

Next Post

காசா மீது தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டம் !

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies