2 நாள் பயணமாக அஸ்ஸாம், அருணாச்சல் செல்லும் ராஜ்நாத் சிங்!
Jul 24, 2025, 06:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 நாள் பயணமாக அஸ்ஸாம், அருணாச்சல் செல்லும் ராஜ்நாத் சிங்!

Web Desk by Web Desk
Oct 23, 2023, 02:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2 நாள் பயணமாக அஸ்ஸாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் செல்கிறார். அப்போது, அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்களுடன் உரையாடுகிறார்.

அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீன இராணுவம் அவ்வப்போது அத்துமீறி வருகிறது. குறிப்பாக, தவாங் செக்டார் பகுதியில் சீன இராணுவம் பலமுறை ஊடுருவ முயன்றிருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தவாங் செக்டாரில் சீன இராணுவம் அத்துமீறி ஊடுருவ முயன்றது. அப்போது, ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்தனர். எனினும், நமது பாதுகாப்புப் படை வீரர்களின் உறுதியான எதிர்ப்பால், சீனத் துருப்புகள் பின்வாங்கின.

இதனால், தவாங் செக்டார் எப்போதுமே பரபரப்பான பகுதியாகக் கருதப்படுகிறது. எனவே, இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தவாங் செக்டாருக்கு சென்று, பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்தார். இது ஒருபுறம் இருக்க, அருணாச்சலப் பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சீனா வெளியிட்ட வரைபடத்தில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை தனது பகுதியாக காட்சிப்படுத்தி இருந்தது.

இதனிடையே, கடந்த வாரம் அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்சே பகுதியில் சீனப் படைகள் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை அத்துமீறி ஊடுருவியதாகவும், இந்திய வீரர்களின் உறுதியான எதிர்ப்பால் பின்வாங்கியதாகவும், இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்ததாகவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களுக்கு 2 நாள் பயணமாக ராஜ்நாத் சிங் இன்று செல்கிறார். இதுகுறித்து ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “2 நாள் பயணமாக இன்று அஸ்ஸாம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களுக்குச் செல்லும் நான் தேஜ்பூரை அடைகிறேன்.

இந்த பயணத்தின்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆயுதப் படை வீரர்களுடன் கலந்துரையாடுவதோடு, அப்பகுதிகளையும் பார்வையிடுகிறேன். மேலும், இராணுவ வீரர்களுடன் தசரா பண்டிகையை கொண்டாடுவதற்கு ஆர்வமாக இருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

 

Today, 23rd October, I shall be reaching Tezpur on a 2 day visit to Assam & Arunachal Pradesh. During my visit, I will interact with Armed Forces personnel deployed in the region and also visit forward areas.

Looking forward to celebrate Dussehra with the soldiers in Tawang.

— Rajnath Singh (@rajnathsingh) October 23, 2023

 

Tags: Rajnath SinghAssamarunachal
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் : வெல்லப்போவது யார் ?

Next Post

அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல்: இந்தியர் கொலை!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies