விஜயதசமியை முன்னிட்டு கேரள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற வித்யாரம்பம் விழாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பங்கேற்றார்.
விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளை கற்கும் உலகிற்கு அறிமுகப்படுத்தும் வித்யாரம்பம் விழா கேரள மாநிலம் திருவனந்தபுரம் ராஜ்பவனில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்று விஜயதசமி. சிறு குழந்தைகளை கல்வியில் சேர்க்கும் நாள். வித்யாரம்பம்’ என்பது எழுத்துக்களை தெய்வமாக வணங்கும் கலாச்சாரம் என்றார்.
நமது கலாச்சாரத்தின் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த காலத்தில் என் தாத்தா, பாட்டி மற்றும் குருக்களிடமிருந்து நான் பெற்றதை அடுத்த தலைமுறைக்கு அளிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.
அறிவை தெய்வமாக வழிபடும் இந்த செயல்பாட்டின் மூலம் ஒரு புதிய கல்வி ஆட்சி தொடங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.