இந்தியாவின் எதிர்ப்பை மீறி இலங்கைக்குள் நுழைந்த சீனக் கப்பல்!
Jan 14, 2026, 04:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் எதிர்ப்பை மீறி இலங்கைக்குள் நுழைந்த சீனக் கப்பல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 26, 2023, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலான ‘ஷியான் 6’ நேற்று இலங்கையை வந்தடைந்திருக்கிறது.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை தொடர்பாக நீண்ட காலமாகவே மோதல் இருந்து வருகிறது. குறிப்பாக, 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன வீரர்களை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், இந்தியத் தரப்பில் 20 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

சீனத் தரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அந்நாடு எந்த தகவலையும் வெளியிடாத நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. இச்சம்பவத்திற்குப் பிறகு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான விரிசல் அதிகரித்திருக்கிறது. இது தொடர்பாக 20 கட்டப் பேச்சுவார்த்தை நடந்தும் சுமூகத் தீர்வு எட்டப்படவில்லை.

இதனிடையே, கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இந்தியாவை உளவு பார்க்கும் வேலையை சீனா தொடங்கியது. இதற்காக, நமது அண்டை நாடான இலங்கையை பயன்படுத்திக் கொண்டது. அதாவது, இலங்கைக்கு ஏராளமான கடனுதவிகளை வழங்கி இருக்கும் சீனா, அந்நாட்டின் ஹம்பந்தோடா துறைமுகத்தையும் 99 வருட குத்தகைக்கு எடுத்திருக்கிறது.

எனவே, அத்துறைமுகத்தை விரிவுபடுத்துவதாகக் கூறி, சீனாவின் உளவுக் கப்பல்களை இலங்கைக்கு அனுப்பி இந்தியாவை உளவு பார்த்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளில் சீன நாட்டுக் கப்பல்களான, ‘ஹை யாங் 24’ மற்றும் ‘யுவான் வாங் 5’ ஆகிய உளவுக் கப்பல்கள் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, இலங்கைக்கு வந்து நமது நிலைகளை உளவு பார்த்திருக்கிறது.

இந்த நிலையில்தான், தற்போது 3-வதாக ஆராய்ச்சிக் கப்பல் என்கிற போர்வையில் மற்றொரு உளவுக் கப்பலை சீனா இலங்கைக்கு அனுப்பி இருக்கிறது. ‘ஷி யான் 6’ என்று அழைக்கப்படும் இந்த ஆராய்ச்சிக் கப்பல், பல 100 கி.மீ. சுற்றளவில் உள்ள அனைத்து நிலைகளையும், செயற்கைக்கோள் உதவியுடன் உளவு பார்க்கும் திறன் கொண்டது.

இலங்கையின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையுடன் இணைந்து இலங்கைக்கு அருகே சர்வதேச கடற்பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்கு, அந்நாட்டு அரசிடம் சீனா ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் இலங்கை அரசு அனுமதி தராமல் காலதாமதம் தாழ்த்தி வந்தது.

மேலும், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அமைச்சர், இந்தியாவின் கவலைகள் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஆகவே, சீன கப்பலுக்கு அனுமதி தரவில்லை என்று கூறியிருந்தார். அதேசமயம், சீனக் கப்பல் வங்கக் கடலில் சுமார் 750 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், “ஷி யான் 6” கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருக்கிறது. இதை இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சகமும் உறுதி செய்திருக்கிறது. மேலும், இக்கப்பல் 17 நாட்கள் இலங்கையில் நிலைநிறுத்தப்பட்டு கடல் பகுதியில் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடும் என்று சீன அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், இலங்கையின் சர்வதேசக் கடற்பகுதியில் இருந்து தமிழகத்தில் உள்ள கூடங்குளம், கல்பாக்கம் அணுசக்தி ஆராய்ச்சி மையங்களையும், சென்னை, துாத்துக்குடி உள்ளிட்ட 6 துறைமுகங்களையும் எளிதில் உளவு பார்த்து தகவல்களை சேகரிக்க முடியும். இதன் காரணமாகவே, சீனாவின் “ஷி யான் 6” கப்பலை இலங்கையில் நிறுத்த இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.

எனினும், இலங்கையில் நிலவிய பொருளாதார நெருக்கடிக்கு சீனா உதவியதால், அந்நாட்டுக்கு உதவும் வகையில் ஆராய்ச்சிக் கப்பலை நிலைநிறுத்த அந்நாடு அனுமதி அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Tags: srilankachina ship
ShareTweetSendShare
Previous Post

காரை கால்களால் பந்தாடி விளையாடிய யானை!

Next Post

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது! – அளுநர் தமிழிசை.

Related News

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies